40
இசைத்தமிழ்க் கலம்பகம்
46. வடமொழியால் தமிழ் கெட்ட வகைகள்
'சிலுவை சுமந்திதோ செல்கின்றார்' என்ற மெட்டு
1
வடமொழி யால்தமிழ் வாழ்வை யிழந்ததே மடமையி னால்தமிழ் மாந்தரும் தந்ததே.
2
வழிபாட்டு மொழியாக வழங்காத படிதமிழ் இழிவாகச் சிறுமையில் இயன்றது நெடிதுமே.
3
அந்தநாள் கொடுந்தமிழ் ஆனபல் திரவிடம் செந்தமிழ்ப் பகையெனச் சேர்ந்தஆ ரியத்திடம்.
4
தமிழையே தாழ்வென்று தமிழர்என் போருமே தள்ளினர் தமிழ்நூல்கள் வெள்ளமே சேருமே.
5
வழங்காமை யாற்பல வண்டமிழ்ச் சொற்களே விளங்காது போய்ப்பல வீழ்ந்துபின் பட்டன.
6
தம்பொருள் இழந்தன தமிழ்ச்சொற்கள் சிலவுமே எம்மொழி யோவென இடந்தந்து நிலவுமே.
7
தலையிடைக் கழகத்துத் தனித்தமிழ் நூலெல்லாம் அலையிடைத் தப்பினும் அழிந்தனபின் னெல்லை.
8
கடைத்தமிழ்க் கழகமும் கலைந்தது மாயமே நடைத்திறம் ஒலிசொல்லும் நற்றமிழ் நோயுமே.
9
வரலாறு மறைந்ததால் வடமேல்நின் றிங்குற்றே வடமொழியால் தமிழ்வளம் பெற்றதென் றிட்டார்.