இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
10
தமிழ்இந்த நாள்ஒரு தனிப்பட்ட கட்சியும்
தாழ்த்தப்பட் டோருமே தழுவுறப் பெற்றது.
11
தாய்மொழி யுணர்வின்றித் தமிழர்பன் மொழிச்சொல்லைத் தமிழோடு கலந்ததால் தவிர்ந்ததே வழக்கெனல்.
12
வையாபுரி போல்வார் வளமாக வாழ்கின்றார் மெய்யான தமிழரே மிடியுண்டு வீழ்கின்றார்.
47. நக்கீரர் அங்கதம்
பண்
―
(சிந்து பைரவி)
1
ஆரியம் நன்று செந்தமிழ் அன்று
பாரினில் என்று பண்பாடு விண்டு கூறின துண்டு கொண்டானும் முன்று கீரனுங் கண்டு வெஞ்சினங் கொண்டு
தீரவே ஒன்று பாடினன் அன்று தீர்ந்தனனே.
2
முரணெது மின்றி முத்தமிழ் கூறி
அரணாயி ருந்த அகத்தியன் வாழி பரணரும் வாழி பாங்காய மர்ந்து
பாரியைப் பாடும் கபிலரும் வாழி
இறந்த கொண்டானும் வாழியே என்ன எழுந்தனனே.
41
தாளம் - ஒற்றை