ஞா. தேவநேயப் பாவாணர்
58. அடிகள் தமிழனுக்கு அறிவுறுத்தல்
பண்
—
(சிந்து பைரவி)
1
ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தே அறியாமை மீதூர அடிமையாய்த் தளர்ந்தே சீரிய கோமகன் சேயைநீ யுணர்ந்தே
செந்தமிழ் பொழியினால் தேறுவை யணர்ந்தே.
2
ஆங்கில வரசினால் அகக்கணுந் திறந்தே அறிவினால் மறுமுறை அகமதிற் பிறந்தே ஈங்குநல் லாட்சியை யேற்றினை சிறந்தே ஏதிலர் ஏமாற்றை எதிர்த்தனை விறந்தே.
3
ஈரடி மைத்தனம் ஈங்கிருந் தனவே இவற்றுளே ஆரியம் எரியள றெனவே சாரயல் ஆங்கிலம் சாய்ந்ததும் கிழமை சாணள வேறியே சறுக்கின முழமே.
4
விடுதலை புகுந்ததாய் வியந்தனை புகழ்ந்தே விழுத்தமிழ் அரணையே வீழ்க்குவை அகழ்ந்தே அடிதலை தடுமாறி அறிவுரை யிகழ்ந்தே அவலைநி னைத்துரலை இடித்தனை மகிழ்ந்தே.
5
தமிழினுக் குலகினில் தகுவதே தலைமை தமிழரும் அடையவே தாழ்விலா நிலைமை இமிழ்தரு மொழியியல் எய்துக நலமே எமதுமெய் வரலாறே எழுகவே வலமே.
6
சிவநெறி மால்நெறி செந்தமிழ் நெறியே செம்மையிற் சிவனடி சேரவே குறியே அவமுற வடமொழி அறைவது வெறியே
அதுதெய்வ மொழியெனல் அறியாமை அறியே.
51
தாளம்
―
முன்னை