52
பண்
இசைத்தமிழ்க் கலம்பகம்
59. மொழித் திருத்தத்தின் தேவை
(இசைந்த மெட்டிற் பாடுக)
மொழியென்ப தொருவன்றன் உளமுள்ள நினைவேனோர் உணரச்செய் ஒலியென்பதே
வழுவென்றும் இயலென்றும் தமிழென்றும் பிறிதென்றும் வரைசெய்தல் தகுமோ என்பார்.
2
உணவென்ப தொருவன்றன் பசிதீர எதும்வாயுள்
இடலாகும் பொருளென்பதோ
மணமுள்ள சுவையான பதமாக நலமேவ
முறையோடும் விளைவுண்பதோ.
3
உயிரெல்லாம் உணவாடை உறையென்னும் இவைமூன்றும் ஒருதன்மை யெனவாகுமே
உயர்வான திணையென்னும் மகனோதன் வினையெல்லாம்
உயர்வாகச் செயல்வேண்டுமோ.
60. தமிழ்க் கல்விப் பயன்
எனக்குன் இருபதம் நினைக்க வரமருள்வாய்' என்ற மெட்டு
(சௌராட்டிரம்)
ப.
தாளம் முப்புடை (திரிபுடை)
தனித்த மொழி யெனும் இனித்த தமிழ்அறிவாய் பண்ணாருந்
தெய்வத்
தனித்த மொழி யெனும் இனித்த தமிழ்அறிவாய்
2.1
பனித்த குமரியில் துனித்த துறவியல்
முனித்தவரை யுளங் கனித்துலகு நடுக்
குனித்த சிவனுங்க வனித்தறிவரொடு
நுனித்த இசைநடத் துனிப் பயிலுமுத்
—
(தனித்த)