106
மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
6. ஈறுகளைப் பொருண்மரபறிந்து புணர்க்கவேண்டும்.
ஒவ்வோர் ஈறும் ஒவ்வொரு அல்லது சிற்சில பொருள்களை
மரபாகக் காட்டும்.
எ-கா : அல்.
செம்மல், கருவல், வள்ளல் - உடையோனை உணர்த்திற்று.
வறுவல், நொறுவல் - செய்பொருளை உணர்த்திற்று.
ஆடல் தொழிலை உணர்த்திற்று.
தோன்றல் - செய்வோனை உணர்த்திற்று.
ஒரே பொருட்குப் பல ஈறும் ஏற்கும். ஈறு பெறுஞ் சொல்லின் இறுதிக்கேற்ப ஓர் ஈற்றைச் சேர்க்க வேண்டும்.
எச்சம், தோன்றல், ஓதுவான், விறகுவெட்டி, வெந்தை என்பவற்றி லுள்ள அம், அல், ஆன், இ, ஐ என்னும் ஈறுகள் செய்வோனையே குறித்தன. குற்றியலுகரச் சொற்களெல்லாம் செய்வோன் பொருளில் இகரவீற்றை
ஏற்கும்.
"
எ-கா : தோன்றி, ஓதி, வெட்டி, இடுக்கி.
7. ஒரு பொருள் இன்னொன்றின் பெருமைப்பாடாயிருந்தால், பெருமையடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம்.
எ-கா : நெருஞ்சில்
―
ஆனைநெருஞ்சில்
அடை
நாவல் - பெருநாவல்
குன்று - குன்றம் - ஈறு.
பெருமைப்பாட்டுப் பெயர்களைப் பெருமைப்பொருள் வேர்களி னின்றும் திரிக்கலாம்.
எ-கா : கடல், கடப்பான் படாகை.
8. ஒரு பொருள் இன்னொன்றின் குறுமைப்பாடாயிருந்தால், குறுமை யடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம்.
எ-கா :அறை
―
கண்ணறை
அகத்தி - சிற்றகத்தி
அடை
முறம் - (முற்றில்) - முச்சில் - ஈறு.
குறுமைப்பாட்டுப் பெயர்களைக் குறுமைப்பொருள் வேர்களினின்
றும் திரிக்கலாம்.
எ-கா : குணில், குக்கல், குற்றி, சிறுக்கன்.
9. ஒப்புமைபற்றிச் சில பெயர்களை அடைசேர்த்தும் சேராமலும் உவமையாகுபெயராகவும் திரித்தும் வழங்கலாம்.