இயனிலைப் படலம்
97
பட்டினம் பிள்ளையார் = பட்டினத்துப்பிள்ளையார்
நகரம்+ஆன் நகரத்தான்
இவை தோன்றலும் கெடுதலும்.
வேம்பு+காய் = வேப்பங்காய்
பனை+தோப்பு பனந்தோப்பு
இவை தோன்றலும் திரிதலும் கெடுதலும்.
மரூஉப் புணர்ச்சி
சில சொற்கள் ஒலிநெறிப்படி ஒழுங்காய்ப் புணராது மருவிப் புணரும். அப் புணர்ச்சி மரூஉப் புணர்ச்சியாம். மருவுதல், நெறி திறம்புதல்.
எ-டு: ஆதன்+தா
அகம்+கை = அங்கை.
(ஆந்தா)-ஆந்தை
நாழி+உரி = நாழுரி-நாடுரி
மக+கள் = மக்கள்
உள்ளங்கை (உள்+அங்கை) என்பது அங்கையின் நடுப்பகுதி. இதில் அம் என்பது சாரியையன்று.
எந்தை, தந்தை என்பன மரூஉப் புணர்ச்சியல்ல. இவை எம்+தா, தம்+தா எனப் பிரியும். தா என்பது தந்தையைக் குறிக்கும் பெயர்ச்
சொல்.
தா+தா = தாதா-தாதை (தந்தையின் தந்தை)-இயல்புப்புணர்ச்சி தா+தா = தாத்தா (தந்தையின் தந்தை)-திரிபுப்புணர்ச்சி
தாதை என்பதிற் போன்றே, எந்தை, தந்தை, ஆந்தை, பூந்தை என்பவற்றிலும் தை என்பது தா என்பதன் திரிபாகும்.
ஒ.நோ:
எம்பி(ன்) எங்கை எவ்வை எம்முன் எந்தை நுங்கை நுவ்வை நும்முன் நுந்தை
நும்பி(ன்) தம்பி(ன்)
தங்கை தவ்வை தம்முன் தந்தை
எம்பின் = எமக்குப் பின் பிறந்தான். கை = தங்கை (பிங்.). எங்கை = எமக்குச் சிறியவள். எம் + அவ்வை = எவ்வை. இதில் அவ்வை என்னும் அன்னையின் பெயர் அன்னை போலும் அக்கையைக் குறித்தது. இச் சொல் சில பழஞ்செய்யுள்களில் தங்கையைக் குறிப்பது, காதல் பற்றிய மரபு வழுவமைதியென அறிக. என் தந்தை, என் தம்பி, என் தங்கை என்பனவெல்லாம் வழக்குப் பற்றிய வழுவமைதியே.