இயனிலைப் படலம்
101
மாபெருந் தமிழினம் சின்ன பின்னமாகச் சிதைவுண்டதென்றும், தெரிவிக்கப் போதிய சான்றாம்.
2. பொருட்டிரிவு முறைகள் (Semantic Changes)
(1) உவமையாகு பெயர்
சில பெயர்கள் உவமை யடிப்படையில் அமைந்துள்ளன.
எ-டு: மாங்காய்-மாங்காய்போன்ற நெஞ்சாங்குலை
தக்கட்டி-தக்கட்டிக்காய்
பட்டைக் கட்டி(sty).
அல்லது கனிபோன்ற
எருமை நாக்கு-எருமைநாக்குப் போன்ற மீன். கிளிமூக்கு-கிளிமூக்கு வடிவான மாம்பழம்.
சில பொருள்களின் பெயர், பண்பியாகுபெயர் முறையில் அப் பொருள்களின் நிறத்தைக் குறிக்கின்றன.
எ-டு: சாம்பல் வாழை, காக்கைப் பிசின், பவழச் சோளம், குருதிக்காந்தள், பொற்கொன்றை, மயிற்கழுத்துச் சில பெயர்கள் உவமைத் தொகையாய்
சேலை.
அமைந்துள்ளன.
எ-டு: ஆரால்மீ னவரை. கோழிக்கால் தையல், பாம்புக் கற்றாழை, வௌவால் மீன்.
க
சில பெயர்கள் உவமை யடிப்படையில்
தெளிவுபற்றி ஈறு பெற்றும் திரிந்தும் உள்ளன.
எ-டு: ஆனைக்கொம்பன்-ஒருவகைச் சம்பாநெல்.
அமைந்து,
காடைக்கண்ணி-காடைக்கண் போன்ற ஒருவகைச் சிறு தவசம் (தானியம்), அதன் பயிர்.
குதிரைவாலி-குதிரைவால்போற் கதிர்தள்ளும் ஒரு வகைச் சிறு தவசப் பயிரும் அத் தவசமும்.
நுணா-நுணல் (மணல் தவளை) போன்ற காய் காய்க்கும்
மரவகை.
(2) மூவகைத் தகுதி வழக்கு
இடக்கரடக்கல் (Euphemism), மங்கலம் (Euphemism), குழூஉக் குறி (Conventional terms) என்னும் மூவகைத் தகுதி வழக்கு முறை யிலும், சில சொற்களும் வழக்காறுகளும் தோன்றியுள்ளன.