இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த் தொண்டு
13
பாராட்டு நாள் பொது விடுமுறை நாளாயிருத்தல் வேண்டும். பேச்சாளர் பதின்மரும் மேற்பட்டவருமாயின் பிற்பகல் நான்கு மணிக்கும், இருவர் மூவராயின் மாலை ஆறு மணிக்கும் தொடங்கி 8 மணிக்குள் முடித்துவிடல் வேண்டும்.
பாரதியார் படத்தொடு கூடிய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை அச்சிட்டு, அவையோர்க்கு வழங்கலாம். ஆண்டுதொறும் பாராட்டுவிழா நிகழ்த்தலாம். விழாவைச் சிறப்பிக்கும் வேறு வழிவகைகளையும் கையாளலாம்.
"செந்தமிழ்ச் செல்வி” ஆகத்து 1979