பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு கே.கே.சா அவர்கட்குப் பாராட்டு

25

தென்றும் அ இ உ என்னும் தமிழ் முச்சுட்டே ஆரிய மொழிகளிலுள்ள சுட்டுச் சொற்கட்கெல்லாம் மூலமென்றும், திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண ஞானப்பிரகாச அடிகள், 1938-ல் தாம் வெளியிட்ட சொற்பிறப்பு- ஒப்பியல் தமிழ் அகராதி முகவுரையில், ``But It was only some ten years ago that the present writer had the good fortune of stumbling on the fact that DR and I E words were actually derived from the same primitive roots," என்று கூறியுள்ளார்.

இந்திய வரலாற்றுத் தந்தையான வின்சென்று சிமிது (Vinsent Smith), தம் 'முந்திய இந்தியா' (Early India) என்னும் வரலாற்று நூலில், மனோன்மணிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை கருத்தை முற்றும் ஒப்புக் கொண்டு, இந்திய வரலாற்றைத் தெற்கினின்றே தொடங்க வேண்டுமென்று நெறியிட்டுச் சென்றார். அதைத் தழுவியே, பி.தி. சீனிவாசையங்கார் 'இந்தியக் கற்காலம்' (Stone Age in India), 'ஆரிய முன்னைத் தமிழப் பண்பாடு' (Pre-Aryan Tamil Culture), 'தமிழர் வரலாறு' (History of the Tamils) முதலிய நூல்களும், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் 'தமிழர் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils), 'வரலாற்று முன்னைத் தென்னிந்தியா' (Pre-Historic South India) என்ற நூல்களும் வெற்றிபெற எழுதிப் போந்தனர்.

கால்டுவெலார்க்குப் பிற்பட்ட மேலை மொழிநூலாரெல்லாம், பேரனைப் பாட்டனாகப் பிறழவுணர்ந்து வரலாறு தீட்டுவார் போல், சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு மொழியாராய்ச்சி செய்ததனால், முட்டுப்பட்டு மதிமருண்டு, “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே," என்னும் (தொல். பெயர்.1) தமிழ் நெறிமுறைக்கு நேர்மாறாக, 'எல்லா மொழியும் இடுகுறித் தொகுதியே,' என்று தம் இரு கண்ணையும் இறுகக் கட்டிக்கொண்டு, ஓர் உயிரியின் தலையும் வாலும் நீக்கி முண்டத்தை மட்டும் வரைந்தாற்போன்று, முன்பின் வரலாற்றை முற்றும் புறக்கணித்து மொழி களின் இற்றை நிலையை மட்டும் எடுத்துக் கூறும் 'வண்ணனை மொழி நூலை' (Descriptive Linguistics) வளர்த்து, மாணவரையும் ஆசிரியரையும் மயக்கி வருகின்றனர். வண்ணனை, ஒப்பியல், வரலாறு ஆகிய மூவியல் களையும் ஒருங்கே கொண்டதே மொழிநூல்.

'வண்ணனை மொழிநூல்' இலக்கண நூலின் ஒரு கூறேயன்றி, மொழி நூலோ முழு நூலோ அன்று. அவர் கூறும் வரலாற்று மொழிநூல் இலக் கியத்தை அடிப்படையாகக்கொண்டதே யன்றி, மொழியை அடிப்படை யாகக் கொண்டதன்று. மொழி இலக்கியத்திற்கு முந்தியது. இலக்கியத்திற்கும் பிந்தியது இலக்கணம். வெள்ளையர் கூறுவதெல்லாம் விழுமிய அறிவியலன்று.