4
பிழை
ஊரு, குளிரு
4. குற்றியலுகரம்
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
திருத்தம்
ஊர்,குளிர்
குற்றியலுகரம் ஏறிவரக்கூடிய மெய் வல்லின றகரமே.
ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெய்யின்மே லேறிவரும் உகரம் குற்றியலுகரம் என்னும் பொது விதியை நினைக்க.
உ-ம்: ஆறு, கிணறு, மற்று, கன்று.
5. புணர்ச்சித் திரிபு
ல், ன் என்ற மெய்களின் புணர்ச்சித் திரிபெல்லாம் வல்லின றகரமே.
உ-ம்: ல் கல் + பலகை =
―
கற்பலகை.
கல் + தாழை = கற்றாழை
வருதல் + கு = வருதற்கு.
ன் - தன் + பெருமை = தற்பெருமை.
5. தற்பவத்திரிபு
பொன் + தோடு = பொற்றோடு.
அதன் + கு = அதற்கு.
வந்ததன் + கு = வந்ததற்கு.
வடசொற்களிலுள்ள த், ஸ், ல் என்னும் எழுத்துகள் தமிழில் திரியக் கூடியது
வல்லின றகரமாயே.
உ-ம்:
உத்சவம் உற்சவம்
பஸ்மம் பற்பம்
அல்பம்
அற்பம்
ரகர றகரச் சொற்கள்
அரம் = ஓர் ஆயுதம்
அரவு = பாம்பு, ஒர் தொழிற்பெயர் விகுதி
அரன் = சிவன்
அரா = பாம்பு, சிவனே!
அரா = ஏ. காய்களைச் சிறிதாயறு,
பொருள்களைச் சிறிது
சிறிதாய்ச் சேர், பயிர்களை அறு, எறும்புபோல் பொருள்களைத் தின்
பெ. அரிக்கட்டு, திருமால்
அரு = பெ. வடிவில்லாதது
பெ. எ. அரியஅருமையான
அறம் = தருமம்
=
அறவு = நீக்கம், முடிவு
அறன் = தருமம் (போலி)
அறா = நீங்கா, நீங்காத (அம்பறாத்தூணி)
அறி = தெரிந்துகொள்.
அறு = ஏ. நீங்கு
பெ. எ. ஆறு (six)