பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

நாடுமாகிய தென்னிலத்தின் தென்கோடியிலிருந்த பெருமலைத் தொடருக்கும், வடகோடியிலிருந்த பேராற்றிற்கும், குமரி யென்னும் காளியின் பெயரே இடப்பெற்றது.

பாண்டியன் மதிக்குலத்தா னாதலால், அவன் முதல் தலைநகர் அவன் குலமுதல்வன் பெயரையொட்டி மதுரை யெனப்பட்டது. மதி-மதிரை-மதுரை. ஒ.நோ; குதி - குதிரை. குதித்தல் = தாண்டுதல்.

வைகை மதுரை பிற்காலத்த தாதலால், ‘மருத முன்றுறை’ என்னும் தொடரினின்று மதுரைப் பெயர் வந்த தென்பது பொருந்தாது. பஃறுளி மதுரைப் பெயரே வைகை மதுரைக்கும் பிற்காலத்தில் இடப்பட்டது.

தலைக்கழகக் கால நாகரிகமும் பண்பாடும்

ஆரியர் தென்னாடு வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்களனைத்தும் அழியுண்டு போயினும், மொழியமைப்பி னின்றும் முக்கழக வரலாற்றினின்றும் கடைக் கழகப் பாடல்களிலும் பனுவல்களிலுமுள்ள குறிப்புகளினின்றும், தலைக்கழகக் கால நாகரிகப் பண்பாட்டை ஒருவாறுணரலாம். மொழி

அஃறிணையினின்று மக்களைப் பிரித்துக் காட்டுவதும், ஒரு நாட்டு மக்களின் நாகரிகப் பண்பாட்டு அளவுகோலும் மொழியே. மொழியினாலேயே மாந்தன் நரன் என்று பெயர் பெற்றிருத்தல்

வேண்டும்.

நரலுதல் = 1. ஒலித்தல். “ஆடுகழை நரலும் சேட்சிமை” (புறம். 120). 2. கத்துதல்."வெண்குருகு நரல வீசும் நுண்ப ஃறுவலைய” (அகம். 14). 3. பேசுதல்.

-

நரல் - நரன் = மாந்தன். “வறிதே நிலையாத விம்மண் ணுலகின் நரனாக வகுத்தனை” (தேவா.934:2). நரன் - நரம் = மாந்தப்பிறவி. “நரத்திலும் பிறத்திநாத” (திவ். திருச்சந்.29),

வானரம் (வால்நரம்)=வாலையுடைய மாந்தன் போன்ற விலங்கு. வானர முகள்” (சீவக. 1168).

66

-

நரன் வ. நர. வானரம் - வ. வாநர.

நர என்னுஞ் சொல்லிற்கு வடமொழியில் வேரில்லை. வானர என்னுஞ் சொல்லை ‘நர ஏவ' என்று பிரித்து, நரனைப் போன்றது என்று பொருள் கூறுவர் வடமொழியாளர்.

மொழிக்கு அடுத்தபடியாக,

மாந்தனின் சிறப்பாற்றல்

முன்னுதல். முன்னுதல்=கருதுதல். முன்னுவான் (வானீற்று நி.கா.வி.எ.)

-

- முன்னான் (ம.) AS. munan (to think).