பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




85

முன்-முன்னம்=1. கருத்து."முன்ன முகத்தி னுணர்ந்து” (புறம். 3). 2. மனம்.(திவா.). முன்னம் - முனம் - மனம் = உள்ளம்.

-

மனம்- வ. மனஸ். L. mens, ME. mynd, E. mind.

=

=

முன் - மன் = கருதும் ஆற்றலுள்ள மாந்தன்.

மன்பது - மக்கட் கூட்டம், "மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்” (பரிபா. 15:52)

மன்பது - மன்பதை = மக்கட்கூட்டம்.

“மன்பதை காக்குநின் புரைமை” (புறம். 210).

LOGOT - Q.LD [5. OS.,OHG. man, E man.

மொழியிலுங் கருத்திலும் அன்றும் இன்றும் என்றும் சிறந்தவன் தமிழனே.

ஒவ்வொரு நாட்டிலும், மொழியை வளர்ப்பவர் பொதுமக்கள்; லக்கியத்தை வளர்ப்பவர் புலமக்கள். மொழிகள் இயன்மொழியும் ரிமொழியும் என இருவகைப்படும். தானே தோன்றியது இயன்மொழி; ஒன்றினின்று திரிந்தது திரிமொழி. ஆகுபெயர்கள் இருமடியும் மும்மடியும் ஆகுவது போன்று, திரிமொழிகளும் இருமடியும் மும்மடியுந் திரியும். திரவிடம் தமிழினின்று திரிந்த திரிமொழி; ஆரியம் திரவிடத்தினின்று திரிந்த இருமடித் திரிமொழி.

குமரிநாடு தமிழன் பிறந்தகம் மட்டுமன்றி மாந்தன் பிறந்தகமு மாதலால், தமிழே இம்மியும் ஏனைமொழி கலவாத முழுத் தூய இயன்மொழியாகும்.

இருதிணை ஐம்பால் ஈரெண் மூவிடங்களாகிய கிளவியிலக் கணமும், நுண்பிரிவுகளையுடைய ய எண் வேற்றுமைப் பெய ரிலக்கணமும், நந்நான்கு வகைப்பட்ட முக்கால வினை யிலக்கணமும், வளமை, செம்மை, மரபு, தகுதி, தூய்மை முதலிய சொற்றிறங்களும்; சுருக்கம், தெளிவு, மதிப்புறவு, இடக்கரடக்கல், மங்கலம் முதலிய சொற்றொடரமைதிகளும் கொண்டு; பதினெண் திரவிட மொழிகட்குத் தாயும் பதினாறாரியப் பிரிவுகட்கு மூலமுமா யமைந்தது தமிழ்.

இருதிணை

எல்லாப் பொருள்களையும், உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் (உயிரியும்) என மூவகையாக வகுத்தாலும், தனக்கும் பிறர்க்கும் நல்லதுந் தீயதுமாகிய இரண்டையும் பகுத்தறியும் பண்பையே சிறப்பாகக் கொண்டு, அஃதுள்ளதை உயர்ந்த வகுப்பென்றும்