பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

சப்புதல்

சுவைத்தல் சவைத்தல்

சூம்புதல்

சூப்புதல்

தின்னுதல்

உண்ணுதல் சாப்பிடுதல்

மடுத்தல்,

அசைத்தல்,

அயிலுதல்

66

I

ஒன்றை மெல்லாது நாவிற்கும் அண்ணத்திற்கும் டையிலிட்டு நெருக்கி, அதன் சாற்றை மெல்ல மெல்ல உறிஞ்சுதல்; அல்லது அப் பொருளைச் சிறிது சிறிதாகக் கரைத்தல்.

ஒன்றை மென்று அதன் சுவையை நுகர்தல். மெல்லிய பொருளை மெல்லுதல், குழந்தை தாய்ப்பாலைச் சப்புதல்.

தித்திப்புக் குச்சும் மூளையெலும்பும் விரலும் போன்றவற்றை வாயிலிட்டுச் சப்புதல். பழமும் பலகாரமும் போன்ற சிற்றுண்டியை மென்று உட்கொள்ளுதல்.

கவளங் கவளமாகச் சோற்றை உட்கொள்ளல். குழம்பும் சாறும் மோரும் (அல்லது அவற்றுள் ஒன்று) கலந்த சோற்றைக் கவளங் கவளமாகக் கறிவகைகளுடன் (அல்லது அவையின்றி) உட்கொள்ளுதல்.

கம்பங்கஞ்சியும் கேழ்வரகு கூழும் போன்ற வாய்மடுத்தல் வற்றைக் கட்டிகட்டியாகக் கூட்டில் தொட்டுண்ணுதல், கவளங் கவளமாகப்பிறர் ஊட்டுதல்.

விலங்கு அசையிடுவதுபோல் அலகையசைத்து அசைவுசெய்தல் மென்று உட்கொள்ளுதல். குழந்தை அளைந்து சோறுண்ணுதல். அயில்-அயின்-அயினி = உணவு.

தாலி களைந்தன்று மிலனே பால்விட் டயினியு மின்றயின் றனனே

99

அள்ளல் = நெருக்கம், குழைந்த சேறு.

அள்-(அய்)-அயில். அளிதல்

அள்-அளாவு. அள்-அளை.

=

(புறம்.77)

கலத்தல்,குழைதல்.

(குறள் 64)

66

சிறுகை யளாவிய கூழ்”

66

இன்னடிசில்

புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்

மக்களையிங் கில்லா தவர்.

(நள.கலிதொ.68)