பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




99

கூலிக்காரன் முதல் கோமகன்வரை எந்நிலையராயினும் எத்தொழிலராயினும், மக்களையெல்லாம் ஆண்டு நடத்தும் குணம் ரண்டு. அவை காதலும் மறமும். மக்களெல்லாரும் ஆடவரும் பெண்டிருமாகப் படைக்கப்பட்டிருப்பதால், காதல் வாழ்க்கை மாபெரும்பாலர்க்கு இன்றியமையாததாகும். பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லையாதலால், ஒரு தொழிலை மேற்கொள்வது எல்லார்க்கும் இன்றியமையாதது. எத் தொழிலிலும் போட்டி தொன்றுதொட்டுச் சிற்றளவாகவோ பேரளவாகவோ இருந்தே வந்திருக்கின்றது. எதிரிகளை வென்று வாழ்க்கையைத் திறம்பட நடத்த மறமும் இன்றியமையாதது.

இனி, ஒரே பெண்ணைப் பலர் மணக்க விரும்பும்போது, காதலிலேயே மறமுங் கலக்கின்றது.

இவ்விரு குணங்களுள்ளும் அல்லது குணவாழ்க்கையுள்ளும், உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதலே. ஆதலால் அதை அகம் என்றார். அகமல்லாதது புறமாதலின் மறத்தைப் புறம் என்றார். இங்ஙனம் இரண்டையும் வேறுபடுத்திக் கூறினும், அவை அகப்பகையும் புறப்பகையும் போலப் பிரிந்து நில்லாது, அகங்கையும் புறங்கையும்போல ஒன்றியே நிற்கும்.

தமிழனுக்குத் தமிழ் அகம்; திரவிடம் அகப்புறம்; ஆரியம் புறம்; சேமியம் புறப்புறம். இவ்வகைக் கூற்றினின்று, அகம் புறம் என்னும் சொற்களின் பொருளை ஒருவாறுணரலாம்.

அரசன் எல்லார்க்குந் தலைமையாகவும் பொதுவாகவும் எல்லாரையுந் தன்னுளடக்கியும் நிற்பதால், அரசனுக்குச் சொன்னது அனைவர்க்குஞ் சொன்னதாகு மென்றும், காதல் வாழ்க்கையிலும் மறவாழ்க்கையிலும் தலைசிறந்த நுகர்ச்சியும் பட்டறிவும் அரசனுக்கே யுண்டென்றுங் கண்டு, ஓர் ளவரசனையே காதலனாகவும் ஓர் இளவரசியையே காதலியாகவுங் கொண்டு, அகப்பொருளிலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இது புலனெறி வழக்கம் எனத் தமிழுக்கே சிறந்த மரபாகும். ஆயினும், இது நாடக வழக்கமும் உலகியல் வழக்கமும் கலந்ததாதலால், சிறுபான்மை பொதுமக்கள் காதல் வாழ்க்கையும் ஆங்காங்குக் கூறப்பெறும்.

துபு

அகப்பொருள் என்னும் காதல் அல்லது மணவாழ்க்கை, கைக்கிளை (ஒருதலைக் காமம்), ஐந்திணை (இருதலைக் காமம்), பெருந்திணை (பொருந்தாக் காமம்) என மூவகையாக வகுக்கப் பட்டுள்ளது. அவற்றுள், எல்லாவகையிலும் நல்லதென ஒப்புக் கொள்ளப்பட்ட இருதலைக் காமம் புணர்தல், பிரிதல், இருத்தல்,