பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




107

பார்ப்பன வாகை, வாணிகவாகை, வேளாண்வாகை, பொருந வாகை, அறிவன்வாகை, தாபத வாகை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, கிணைநிலை என்று வாகைப் படலத்திலும்; மல்வென்றி, உழவன்வென்றி, ஏறுகொள்வென்றி, கோழிவென்றி, தகர்வென்றி, பூழ்வென்றி, சிவல்வென்றி, வன்றி, AO கிளி வென்றி, பூவைவென்றி, யாழ்வென்றி, சூதுவென்றி, ஆடல்வென்றி, பாடல் வென்றி என்று ஒழிபிலும், புறப்பொருள் வெண்பா மாலையும் கூறுவ தால் அறியப்படும்.

யானைவென்றி,

சிலர், சிறப்பாக ஆரிய வழியினர், பொருளிலக்கணம் பாட்டியலே (Poetics) யன்றி வேறன்று என்று, அதன் சிறப்பை இறப்பக் குறைத்தும் மறைத்தும் கூறுவர். பிராமணனைத் தலையாக வுயர்த்தியும் தமிழனைக் கடையாகத் தாழ்த்தியும், எழுத்து, சொல், பா, பனுவல் முதலியவற்றிற்கு நால்வகை வரணம் வகுப்பதே பாட்டியல். பொருளிலக்கணமோ, மாந்தன் இதுவரை அறிந்ததும் இனிமேல் அறியப்போவதுமான எல்லாப் பொருள்கட்கும் புலனெறி வழக்கப்படி இலக்கணம் வகுக்கும் இலக்கணம் வகுக்கும் ஈடிணையற்ற அறிவியம்.

காஞ்சித்திணையுள்

ளமை நிலையாமை, செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, உடல்நல நிலையாமை ஆகிய பல்வேறு நிலையாமைகளை எடுத்துக் கூறுவதை, மக்களை நன்னெறிப் படுத்தற்கு வாய்ப்பாகக் கொள்வதும், தமிழப் பண்பாட்டுக் கூறாம். மக்களெல்லாரும் இறப்பையும் வாழ்நாட் குறுக்கத்தையும் எண்ணி, சொல்லைச் சுருக்கிச் செயலைப் பெருக்கி, செந்தமிழிற் பேசி, காதல் மனையாளொடு கூடி இன்பம் நுகர்ந்து, இயன்றவரை அறஞ்செய்து, தத்தம் தொழிலில் வெற்றிபெறுமாறு மேன்மேல் திறம் மிகுத்து இறுதியில் இறைவனையடைய

வேண்டுமென்பதே முதனூலாசிரியர் நோக்கமாம்.

செய்யுள்

பண்டைய புலவர் ய புலவர் உரைநடை, செய்யுள் என்னும் இருவகை நடையுள்ளும் செய்யுள் சிறந்ததென்று கண்டே, உரைகளும் அகரமுதலி போன்ற உரிச்சொற்றொகுதிகளும் உட்பட, எல்லாப் பனுவல்களையும் செய்யுளில் இயற்றினர். இதையறியாது,பண்டைப் புலவர்க்கு உரைநடையில் எழுதத் தெரியாதென்றும், உரைநடை நூலில்லாதது பண்டை யிலக்கியத்திற்கு ஒருபெருங் குறையே யென்றும் கூறுவார் “பொரிமாவை மெச்சினானாம் பொக்கை வாயன்” என்ற பழமொழிக்கே எடுத்துக்காட்டாவார்.