பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

நால்வகைப்

பாக்கட்குள்,வெண்பாவும்

கலிப்பாவும் போன்றவை வேறெம்மொழியினுங் காணமுடியாது. இறைவனை வழுத்துவதற்கும் காதற் செய்தியை வண்ணிப்பதற்கும், ஒத்தாழிசைக் கலிவகை போன்ற யாப்பு வேறொன்றுமில்லை.

அணி

பொருளை விளக்குவதற்கும் தெரியாத பொருளைத் தெரிவிப் பதற்கும் உவமை இன்றியமையாத தாகையாலும், பெரும்பாலும் எல்லா அணிகட்கும் உவமையே மூலமாதலாலும், செய்யுளியற்று வாரின் திறமைக்குத்தக்கவாறு இயல்பாகவே அணி அமையுமாத லாலும், காலஞ் செல்லச்செல்லப் புதிதுபுதிதாக அணிகள் தோன்றுமாதலாலும், முதனூலாசிரியர் அணிவகையில் விளக்கக் கருதியது உவமை யொன்றே.

உவமை எல்லா மொழிகளிலுங் கையாளப்படுமேனும், உள்ளுறையென்னும் உவமைவகை தமிழுக்கே சிறப்பாக வுரியதாம். ஒரு தலைவனைத் தலைவி அல்லது தோழி விளிக்கும் போது, அவன் தன்மை புலப்படுமாறு அவன் நாட்டுக் கருப்பொருளின் செயலை எடுத்துக் கூறுவது உள்ளுறை யுவமமாம்.

66

பைந்தலைய நாகப் பணமென்று பூகத்தின் ஐந்தலையின் பாளைதனை யையுற்று - மந்தி தெளியா திருக்குந் திருநாடா வுன்னை

ஒளியாது காட்டுன் னுரு.

99

(நள. கலிநீங்.70)

இது இருதுபன்னனின் தேரோட்டியாக வந்திருந்த நளனை நோக்கித் தமயந்தியின் தோழி கூறியது.

நளன் கார்க்கோடகன் என்னும் பாம்பினாற் கடியுண்டு நிறம் மாறியிருந்ததனால், தெளிவாக அடையாளந் தெரியாது மயங்கி நின்ற தோழி, “உன் நாட்டு மந்தி, ஐம்பிரிவான கமுகம் பாளையைப் பார்த்து ஐந்தலை நாகமோ என்று ஐயுற்றுத் தெளியாதிருக்கின்றது” என்றது, “நானும் உன்னைப் பார்த்து நளனோ வேறொருவரோ என்று மயங்கித் தெளியாதிருக்கின்றேன்” என்னும் பொருள்பட நிற்பதால், உள்ளுறை யுவமமாம்.

இசை

தலைக்கழகக் காலத்திலேயே, மிடற்றிசையும் (வாய்ப்பாட்டும்), தோல் துளை நரம்பு உறை (வ. கஞ்சம்) என்னும் நால்வகைக் கருவியிசையும் வளர்ச்சி யடைந்திருந்தன.