பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




119

காட்டு எலியட்டு (Scott Elliot) எழுதியுள்ள 'மறைந்த குமரிக்கண்டம்’ என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெரு மலையானது மேலைக்கடலில் தொடங்கி...... மடகாசுக்கர் (Madagascar) என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரி கின்றது..

இம் மலையைத் தமிழிற் குமரியென்றும் வடமொழியில் மகேந்திரம் என்றும், முன்னோர் கூறினாரென்பதற்குக் காரண முண்டு. சிவதருமோத்தரம் என்னுஞ் சைவவுபாகமத்தில், பொதியிற்குத் தென்பால் மகேந்திர முண்டென்றும், அந் நூலுரையுள் தெற்குமுதல் வடக்கு ஈறாக அஃது இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது. அதனடிவாரத்துள்ள தேசம் பொன்மயமான இலங்கை யென்றும் குறிக்கப்படுகின்றது என்று பேரா. கா. சுப்பிரமணியப் பிள்ளை சை. சி.நூ.ப. கழகப் பதிப்பான தொல் காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியத்திற்குத் தாம் வரைந்துள்ள ஆராய்ச்சி முன்னுரையிற் கூறியுள்ளார்.

66

99

உன்னதத்தென் மயேந்திரமே யுயர்மலையஞ் சையகிரி வின்னவிலுஞ் சுத்திகமே யிருக்குமுயர் விந்தியமே பன்னுபுகழ் மிகுபாரி யாத்திரமே யெனப்பகர்ந்த இன்னகிரி யேழுமுதற் குமரிதலத் திசைந்தனவே. அங்கமெதிர் நிரனிறையாற் சமாக்கியமு மணிமலையுஞ் சங்கமுந்தண் குமுதமுநல் வராகமெனுந் தலந்தானுந் துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின் அங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்.

99

(சிவதருமோத்தரம், கோபுரவியல்,47,48)

இச் செய்யுள்களினின்று, இடைக்கழகக் காலத்தில், குமரி முனைக்குத் தெற்கில் பழைய குமரிமலைத் தொடரின் பகுதி யாகவோ தனியாகவோ ஒரு மலை யிருந்த தென்றும், அதனின்றே குமரியாறு தோன்றிக் கிழக்கு நோக்கி யோடிய தென்றும், இலங்கை இந்தியா வாடு இணைந்திருந்ததென்றும், குமரியாறும் பொருநையாறும் இலங்கையூடும் ஓடியிருக்கலா மென்றும், பாண்டிநாடு குமரி முனையினின்று 500 கல் தொலைவு தெற்கே நீண்டிருந்திருக்கலா மென்றும் உய்த்துணரப்படும்.

சோழனுக்கு உறையூரும், சேரனுக்குத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கருவூரும் தலைநகராயிருந்தன. பாண்டியன் தலைநகர், ஆட்சிக்கும் நீர்வாணிகத்திற்கும் ஒருங்கே பயன்பட்டது. நெல்லை மதுரை மதுரை முகவை மாவட்டங்களின் மேல்பகுதியும் கொங்குநாடும் வேம்பாய் (Bombay) மாநிலத்தின் மேல்பாகமும் சேரநாடா யிருந்தன.