பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




125

66

99

கீண்டது வேலை நன்னீர் கீழுறக் கிடந்த நாகர் வேண்டிய வுலக மெங்கும் வெளிப்பட மணிகள் மின்ன (கம்பரா.கடல்தாவு. 21)

என்னும் கம்பராமாயண அடிகளும், இங்குக் கவனிக்கத்தக்கன. ஆரியத் தொல்கதை மயக்கினால், இடைக்காலப் பெரும்புலவரும், நாகர் என்னும் மாந்தரினத்தாரைப் பாம்பினமாகக் கருதிவிட்டனர். கீழ்நாடு என்பதையும் கிழக்கு நாடென்று கொள்ளாது, நிலத்திற்கும் நீருக்கும் கீழுள்ள நாடென்று கொண்டுவிட்டனர்.

கடல்கோள் நிகழ்ந்தவுடன், பாண்டியன் முன்னரே தான் அணியமாக வைத்திருந்த பெருங்கலத்திலேறி வெள்ளத்தைக் கடந்து, கொற்கைத்துறைப் பக்கம் வந்து சேர்ந்திருத்தல் வேண்டும். அதன்பின், கடல்கோட்குத் தப்பிய தன் குடிகள் வாழ்தற்கு, சோழநாட்டிலும் சேர நாட்டிலும் தென்கோடிப் பகுதிகளை வென்று கொடுத்தான் என்பது,

66

மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்

புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்” (கலித்.104)

என்னும் முல்லைக்கலித் தரவால் அறியக் கிடக்கின்றது. "மேவார் நாடு”, “வலியினான் வணக்கிய” என்னுங் குறிப்புகளால், சேர சோழர் நிலந்தர இணங்காமையும் பாண்டியன் பொருது வென்றதும் அறியப்படும்.

66

ம்

‘அடியிற் றன்னளவு. தென்னவன் வாழி" என்னும் சிலப்பதிகாரப் பகுதியுரையில், “அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமு மென்னு மிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன் வாழ்வானாக வென்றவாறு” என்று அடியார்க்குநல்லார் வரைந்திருப்பது, இரண்டாம் கடல்கோட்குப் செய்தியையே குறிக்கும்.

பிற்பட்ட

முதற் கடல்கோட்குப்பின் நிகழ்ந்தது போன்றே, இரண்டாம் கடல்கோட்குப் பின்னும், தென்னாட்டு மக்கள் வடதிசையும் வடநாட்டு மக்கள் வடமேலைத் திசையும் பரவிச் சென்றனர். கடல்கோட் செய்தி பாபிலோனையும் எட்டிற்று.

முதற் கடல்கோள் மாபேரளவினதா யிருந்து ஞாலத்தின் மேற்புறத்தைப் பலவிடத்தும் மிக மாற்றியிருப்பினும், அது மிகப்