பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

கொண்டுபோகப்பட்ட தென்றும், பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறுகின்றது. சாலி (சாவகம்) நியூகினியாப் பக்கத்திலிருப்பதால்,சீனத் திற்குமுன் சாலிக்குக் கரும்பு சென்றிருக்கும் என்பதை உய்த்துணரலாம். விண்ணுலகத்திற்கு மாகம் என்பது ஒரு பெயர்.

"மாகந்தொட நனிநிவந்த கொடி

99

மாகம் என்பது நாகம் எனத் திரியும்.

66

"நாகநீள் நகரொடு நாகநா டதனொடு"

(IT GOT IT.34:15)

(சிலப்.1:21)

என்பதில் நாகநீள்நகர் என்பது தேவருலகைக் குறித்தல் காண்க. ஆகவே, நாகநாடென்பது மேலை யுலகத்திற்கும் கீழை நாடுகட்கும் பொதுப் பெயராம் .

சாலிநாட் டரசர்க்கு இந்திரன் என்னும் பட்டம் இருந்தது. வெள்ளையானை கீழைநாடுகளுள் ஒன்றாகிய கடாரத்தில் (பர்மாவில்) வாழ்ந்தது.இந்திரன் யானை வெள்ளையானையென்றும், அதன் பெயர் ஐராவதம் என்றும் தொல்கதை கூறும். கடாரத்தில் வெள்ளை யானை இருந்ததால், அங்கு ஓடும் ஆறு ஐராவதி எனப்பட்டது.

விண்ணுலகப் பெயரும் தேவர்கோன் பெயரும் வெள்ளை யானையும் கீழைநாட்டிற்கு இசைந்ததால், எண்டிசைத் தலைவருள் ஒருவனாகிய தேவர்கோனுக்குக் கீழைத்திசை குறிக்கப்பட்டது.

சேரருள் ஒருவன், இந்திரன் என்னும் பட்டங்கொண்டவன் ஆண்ட நாடாகிய சாலியினின்று தமிழகத்திற்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிராக்கினான். அதனால், அவன் மரபில் வந்த அதிகமான் நெடுமான் அஞ்சியை,

66

66

அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் அரும்பெறல் மரபின் கரும்பிவட் டந்து நீரக விருக்கை யாழி சூட்டிய

தொன்னிலை மரபினின் முன்னோர் போல

வழுவின் றெய்தியும் அமையாய்"

என்றும், அவன் மகன் பொகுட்டெழினியை, அந்தரத் -தரும்பெற லமிழ்தம் அன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே'

என்றும் பாடினார் ஔவையார்.

(புறம்.99)

99

(புறம்.392)