பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




135

இங்ஙனம்,

நிலவணிகரும் நீர்வணிகரும் மூவேந்தரும், ஞாலத்தின் பலவிடங்கட்கும் சென்று, ஆங்காங்குள்ள அரும் பொருள்களையெல்லாம் கொணர்ந்து, தமிழகத்தையும் தமிழர் வாழ்க்கையையும் வளம்படுத்தினர்.

சீனத்தினின்று கற்பூரம் கற்கண்டு சீனக்காரம் முதலியனவும், சாலியினின்று கரும்பு கராம்பூ திப்பிலி (பண்டகி) முதலியனவும், மொலுக்காசினின்று அட்டிகமும் (சாதிக்காயும்), இந்தோனேசியா வென்னும் கீழிந்தியத் தீவுக்கணத்தினின்று கொடியீந்து என்னும் சவ்வரிசியும், மலையாவினின்று பாக்கு என்னும் அடைக்காயும், இலங்கையினின்று கருவாப்பட்டையும், ஆபுகானித்தானம் என்னும் காந்தாரத்தினின்று பெருங்காயமும், அரபியாவினின்று அடப்பம் (வாதுமை), கொடிமுந்திரி, சுராலை (சாம்பிராணி) முதலியனவும், மேலையாசியாவினின்று கசகசா, அத்திரி (கோவேறு கழுதை) முதலியனவும், சின்ன ஆசியாவினின்று கொத்துமல்லி, சீரகம், பெருஞ் சீரகம், கொங்காரப்பூ (குங்குமப்பூ) முதலியனவும், மெகசிக்கோ வினின்று மிளகாயும், அமெரிக்காவினின்று வள்ளி யென்றும் சருக்கரைவள்ளியென்றும் சொல்லப்படும் கிழங்கும், பிறவிடங் களினின்று பிறவும் வந்து சேர்ந்தன.

சீனிக்

கி.மு. 1500 போல் ஆரியர் இந்தியாவிற்கு வரும்வரை, தமிழ் மொழியும் தமிழிலக்கியமும் தமிழ நாகரிகமும் தமிழர் வாழ்க்கையும், இம்மியும் ஆரியங் கலவாது முழுத் தூயநிலையில் இருந்துவந்தன.