பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அவரைப் பதினெண்குடி மக்கள் என்பது மரபு. அக் குடிகளை ன்சிலோ (Winslow) அகரமுதலி பின்வருமாறு கூறும்:

தச்சன்

கோவிற்குடியான்

எண்ணெய் வாணிகன் (சங்கூதுவோன்)

வண்ணான்

நாவிதன்

குயவன்

உப்புவாணிகன்

தட்டான்

இலைவாணிகன்

கன்னான்

பள்ளி

கற்றச்சன்

பூமாலைக்காரன்

கொல்லன் பறையன்

ஓச்சன்

வலையன்

பாணன்

இவற்றைப் பின்வருமாறுங் கூறலாம்:

வண்ணான்

உமணன்

மருத்துவன்

மஞ்சிகன்

தச்சன்

கணியன்

(முடிதிருத்தி)

(மரக்கொல்லன்)

பறம்பன்

கல்தச்சன்

கிணையன்

(தோலின்துன்னன்)

தட்டான்

(பறையன்)

உவச்சன்

(பொற்கொல்லன்) துடியன்

கோலிகன்

பணிசெய்வோன்

பாணன்

(நெசவாளன்)

குயவன்

கூத்தன்

செக்கான்

கன்னான் செம்புக் காலத்திலும், இருப்புக் கொல்லன் இரும்புக் காலத்திலுமே தோன்றியிருத்தல் கூடும்.

66

துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிந்நான் கல்லது குடியு மில்லை

99

(புறம்.335)

என்னும் புறநானூற்றுக் கூற்று, ஒரு குறிப்பிட்ட இடம்பற்றியதே யன்றிப் பொதுப்படக் கூறியதன்று.

குடிமக்கள் என்னுஞ் சொல், நிலையான குடிகளாகிய உழவர்க் குப் பல தொழிலுஞ் செய்து மக்கள்போல் உதவுபவர் என்று பொருள் படுவது. குடிமக்கள் எல்லாருள்ளும் விதப்பாகக் குடிமகன் என்று இன்றுஞ் சொல்லப்படுபவன் முடிதிருத்தாளனே.

குடிமக்கள் பலரும் தம் தொழிற்கு அல்லது தொண்டிற்கு உரிய கூலியைக் களத்திலும் உழவர்மனையிலும் வாங்கி வந்தனர்.

வயலிலும் வாய்க்காலிலும் மீன் பிடிக்கப்படுமேனும், கடுங் கோடைக் காலத்தில் ஆறுங் குளமும் வற்றிவிடுமாதலாலும், களர்