பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்

99

(புறம்.140) என்னும் பிற்காலச் செய்யுள் முற்கால நிலைமையையும் உணர்த்தும். பொருநை யென்னும் நெல்லை மாவட்ட ஆற்றங்கரையிற் செம்பு கிடைத்ததால், அவ் வாறு தாம்பரச் செப்பு என்று பொருள்படும் தாமிரபரணி என்னும் இருபிறப்பிச் சொல்லால் (hybrid) பிற்காலத்திற் குறிக்கப்பட்டது. நெல்லை யருகிலுள்ள ஒரு நகர் செப்பறை (செம்பு + அறை) எனப் பெயர் பெற்றுள்ளது. சிவபெரு மானின் ஐவகை அம்பலங்களுள் ஒன்றான நெல்லை யம்பலம், செப்போடு வேயப் பெற்றதால் செப்பம்பலம் (தாமிரசபை) எனப்பட்டது. பொதியமலை செம்பிற் பொருப்பு எனப்பட்டது. செம்பிற் பொருப்பு"

CC

தென்கால் விடுக்குஞ்

செம்பிற் பொருப்பு

=

(கல்லா.51:11)

செம்புத்தாது உள்ள மலை. இதைச்

செப்புவரை யென்று குற்றாலத் தலபுராணங் கூறும்.

செந்நிறமாயிருந்ததனால், செம்பு என்றும் செம்பொன் என்றும்

தாம்பரம் என்றும், புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மாழை அல்லது பொன்னம் பெயர் பெற்றது.

செம் - செம்பு - செப்பு.

தும் - தும்பு - தும்பரம்

=

சிவப்பான அத்திப்பழம், அப் பழம்

பழுக்கும் மரம்.

தும்பரம் -வ. உதும்பர்.

தும்பு - துப்பு = 1. சிவப்பு. 2. பவழம். “துப்புறழ் தொண்டைச் செவ்வாய்" (சீவக. 550). 3. அரக்கு (பிங்.).

தும் - துமர் - துவர் = 1. சிவப்பு “துவரிதழ்ச் செவ்வாய்” (சிலப். 6:26). 2. பவழம் (திவா.) 3. துவரம்பயறு அல்லது செடி. துவர்ங்கோடு' (தொல். எழுத்து.393,உரை).4. காவி. “துவருறு கின்ற வாடை யுடல்போர்த்து" (தேவா.608:10). 5. துவர்ப்பு. “துவர்மருவப் புளிப் பேற்றி" (தைலவ.தைல.). 6. நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப் பொருள். "விரையொடு துவருஞ் சேர்த்தி" (சீவக.623). 7.பாக்கு. வாச மணத்துவர் வாய்க்கொள் வோரும்" (பரிபா.12:22).

66

காசுக்கட்டியும் சாயப்பாக்கும் போன்ற செஞ்சரக்குத்

துவர்ப்பா யிருப்பதால், துவர் என்னுஞ் சொல் துவர்ப்புப் பொருள் கொண்டது.