பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




51

இதுகாறுங் கூறியவற்றால், வடசொல்லாகக் கருதப்படும் தாம்பரம், தாமரை என்னுஞ் சொற்களும் தென்சொல்லே யென்றும், ங்ஙனமே நூற்றுக் கணக்கான தென்சொற்கள் வடமொழியில் இனம்மறைந்து வழங்குகின்றன வென்றும், தமிழ் உண்மையில் திரவிடத் தாயும் ஆரிய மூலமும் ஆகுமென்றும் அறிந்துகொள்க.

பொற்காலத்திற் பொன்னால் உண்கலம் குடிகலம் நீர்க்கலம் முதலிய பல்வகைக் கலங்கள் செய்யப்பட்டனவேனும், அவை பெருமக்களாலேயே பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். முதன் முதலாகப் பொதுமக்கள் புழங்கிய மாழைக் கலங்கள், செம்பினாற் செய்யப்பட்டவையே. அதனால், சில குறிப்பிட்ட வடிவையுடைய கலங்கள் எவ்வெக் கருவியாற் செய்யப்படினும், இன்றும் செம்பு, செப்பு, செப்புக்குடம் எனச் செம்புக்காலப் பெயர்களாலேயே வழங்கி வருகின்றன.

நிலையாக வைத்துப் போற்ற வேண்டிய ஆவணங்களும் முறிகளும், எங்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில், செப்பேடுகளிற் பொறிக்கப்பட்டுச் செப்புப் பட்டையம் எனப் பட்ட ன.

செம்பில் வார்க்கப்பட்ட தெய்வப் படிமைகள் செம்புக் குட்டி யென்றும், செப்புத் திருமேனி யென்றும் சொல்லப்பட்டன.

66

புளியிட்ட செம்பையும் போற்று கிலேனுயர் பொன்னெனவே' (பட்டினத்தார்,பொது.61)

99

முதன்முதல் மரத்திற் குடையப்பட்ட அல்லது செய்யப்பட்ட மரக்கால் என்னும் முகத்தலளவைக் கருவி, செம்பிலும் வார்க்கப் பட்டுச் செப்புக்கால் எனப் பெயர் பெற்றது. செப்புக்கால் திருச்சிற்றம்பல முடையான் என்பது, சோழர் காலத்தில் வழங்கிய நெல்லளக்குங் கருவி வகை.

உளி, கத்தி, அரம், வாள், கறண்டி, கலப்பைக் கொழு முதலிய பலவகைக் கருவிகளும், பொற்காலத்திற்குப் பின் செம்பிலேயே செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

வலிய பகைவராலும் எளிதாய்த் தகர்க்க முடியாவாறு, செம்பை யுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டிய இஞ்சி யென்னுங் கோட்டை மதில்வகை, எருமையூர்(மைசூர்) நாட்டுத் துவரை நகரி லிருந்தமை மேற்குறிக்கப்பட்டது. இராவணன் கோட் அத்தகைய மதிலுடைமையாற் செப்புக்கோட்டை யெனப்பட்டது.

"செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி"

L

(கம்பரா.கும்ப.160)