பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




53

66

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர

ஓரிற் கூடிய வுடன்புணர் கங்குல்

99

20

(அகம்.86)

கால்

இதன் பொருள்:1-4.உழுத்தம் பருப்பொடு சேர்த்துச் சமைத்த கொழுமையான குழைந்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையை உண்டல் டையறாது நிகழ, வரிசையான களையுடை ய குளிர்ந்த பெரிய பந்தற்கீழ்க் கொண்டுவந்து கொட்டிய மணலைப் பரப்பி, வீட்டில் விளக்கேற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு,

5-10. தீய கோள்களின் தொடர்பு நீங்கிய வளைந்த வெண்ணி லாவைக் குற்றமற்ற சிறந்த புகழையுடைய சகடம் என்னும் நாள் அடைய, மிகுந்த இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற் காலையில், உச்சந்தலையிற் குடத்தையும் கையிற் புதிய அகன்ற மொந்தையையும் உடைய, மணஞ் செய்து வைக்கும் ஆரவாரமுள்ள முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறைப்படி எடுத்தெடுத்துக் கொடுக்க,

11-16. மகனைப் பெற்ற தேமலுள்ள அழகிய வயிற்றையும் தூய அணிகளையும் உடைய மகளிர் நால்வர் கூடிநின்று, கற்பினின்றும் தவறாது பல நற்பேறுகளைப் பெற்று, உன் கணவன் விரும்பிப் பேணும் விருப்பத்திற் கிடமாகுக என்று வாழ்த்தி, நீரொடு சேர்த்துப் பெய்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள், அடர்ந்த கரிய கூந்தலில் நெல்லொடு விளங்க,

17. நல்ல மணவிழா முடிந்த பின்பு.

18-20 சுற்றத்தார் ஆரவார ஓசையுடன் விரைந்து வந்து, பெரிய மனைக்கிழத்தி யாவாய் என்று சொல்லிச் சேர்த்துவைக்க, ஓர் அறையில் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய இரவில்.

66

மைப்பறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு

வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்

சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணும் இமையார் நோக்குபு மறைய

5