பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

நாடாதலால், குளிர்வெண்மதி குலமுதலாகக் கொள்ளப்பட்டது போலும்! வேப்பந்தாரை யணிந்ததற்கும் கயற்கொடி கொண்ட தற்கும் இதுவே கரணியமா யிருக்கலாம். தாராலும் கொடியாலும் வேம்பன் மீனவன் என்னும் பெயர்களும் எழுந்தன. கயல்மீன் யானைமீனும் பனைமீனும் போலப் பருமீனன்றாதலின், அதைக் கொன்றதனாற் பிடித்த வெற்றிச்சின்னமாகக் கயற்கொடியைக் கருத இடமில்லை. குளிர்ந்த பேரொளி வீசும் முழுமதி போன்றவன், குடிகள் பேரின்பமும் அறிவும் பெற ஆளும் அரசன் என்னுங் கருத்திற் பிடிக்கப்பட்ட மதிவட்டக்குடை அல்லது வெண்கொற்றக் குடையும் தமிழகத்தின், சிறப்பாகப் பாண்டிநாட்டின் வெப்ப நிலையைக் குறிப்பாக வுணர்த்தும்.

நண்ணிலக்கோடு குமரிமுனைக்குத் தெற்கிற் பதின் பாகைக்குள் இருப்பதும், இற்றைத் தமிழகத்திலும் வடவாணரினும் தென்வாணர் பெரும்பாலுங் கருத்திருப்பதும், முழுகிப்போன தென்பாண்டி கருத்திருப்பதும்,முழுகிப்போன நாட்டின் வெம்மை மிகுதியை யுய்த்துணர ஏதுவாகும்.

சோழ பாண்டியர் பாண்டவர்க்குத் துணையாகவும் சேரன் நடுநிலையாகவும் பாரதப்போரிற் கலந்துகொண்டதனாலும், மூவேந்தர் குடிகளும் பாண்டவ கௌரவர்க்கு முன்பே வரலாற்றிற் கெட்டாத் தொன்முது பழங்காலத்தில் தோன்றியமையாலும், பாண்டியன் என்னும் சொல்லைப் பாண்டவன் என்னுஞ் சொல் லினின்று திரிப்பது, வரலாற்றறிவும் ஆராய்ச்சித்திறனும் இல்லாதவர் செயலெனக் கூறி விடுக்க.

இனி, பழையன் என்னும் குறுநிலமன்னன் ஒருவன் பாண்டி நாட்டில் வாழ்ந்து, வேம்பைக் காவல்மரமாக வளர்த்ததையும், பாண்டிய வேந்தரின் பழைமையையும் நோக்கி, பண்டு என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னுஞ் சொல்லைத் திரிப்பர் சிலர். பாண்டிய வேந்தன் இன்றுதான் நமக்குப் பழைமையானவனே யன்றி, அவன் முதன்முதலாகக் குமரிநாட்டில் தோன்றியபோது ஒருவருக்கும் பழைமையானவன் அல்லன் என்றும், பழையன் என்னுஞ் சொல் ஒருவனது இயற்பெயருக்கே யன்றி, ஓர் ஆள்குடிப் பெயருக்கு ஏற்கா தென்றும், அவர் அறிதல் வேண்டும்.

பாண்டிய வேந்தன் ஐந்திணை நிலங்களையுங் கைப்பற்றி ஆண்டதனால், கருங்கடல் முதல் கருமலைவரை நாடு முழுதுங் காவற்குட்பட்டது. பாலைநிலவாணர் வேந்தனின் படை மறவராயினர். அந்நிலத் தலைவன் காட்டுப்படைத் தலைவனானான். ஏற்கெனவே யிருந்த மருதநிலப் படை நாட்டுப்படை யெனப்பட்டது. போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும் நிலையாக விருந்த படை