பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




65

நிலைப்படை யென்றும், அவ்வப்போது போரின் தேவைக்குத் தக்கவாறு கூலிக் கமர்த்தப்பட்ட படை கூலிப்படை யென்றும், பெயர்பெற்றன.

காவல் மிகுந்து களவுங் கொள்ளையும் போரும் நீங்கவே, நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவின. தொழில்கள் பெருகின. வழிப்போக்கும் இடம்பெயர்வும் அச்சம் நீங்கின. வணிகம் வளர்ந்தது. மக்கள் பெருகப் பெருக மெல்ல மெல்ல வடக்கே சென்று பரவினர். நாட்டுச் செல்வத்தை மிகுக்கவும், நாகரிக வாழ்க்கைக்கேற்ற பொருள்களைத் தொகுக்கவும், காட்டுவழிகளி லெல்லாம் காவற் படையை நிறுவி நில வாணிகத்தையும், கடற்கரை வளைந்துள்ள இடங்களிலெல்லாம் துறைநகர்களை யமைத்து நீர்வாணிகத்தையும்,

வேந்தன் ஊக்கினான்.

ஏற்கெனவே, இயற்கை மொழிக் காலத்திற் பிரிந்து சென்ற மாந்தரினங்கள் ஆப்பிரிக்க ஆத்திரேலிய நிலப்பகுதிகளிலும், இழைத்தல் மொழியின் அசைநிலைக் காலத்திற் பிரிந்து சென்ற மாந்தரினங்கள் சீன மங்கோலிய நிலப்பகுதிகளிலும், கொளுவு நிலைத் தொடக்கக் காலத்திற் பிரிந்து சென்ற மாந்தரினங்கள் மேலையாசிய நிலப்பகுதிகளிலும், செம்புக்காலத்தில் ஏகார ஓகாரங்கள் குறுகு முன்னும்ளழறன தோன்றுமுன்னும் பிரிந்து போன மாந்தரினங்கள் வடஇந்தியாவிலும், பெருகிப் பரவி வந்தன. பெருநிலங்களில் வாழ்ந்தவருட் சிலர் அவற்றையடுத்த சிறுநிலங் களான தீவுகளிலுங் குடியேறினர்.

பெருநிலத்தினின்றும் தீர்ந்து நாற்புறமும் நீராற் சூழப்பட் டிருக்கும் சிறுநிலமே தீவாகும்.

-

தீர் - தீர்வு - தீவு. ஒ.நோ. கோர் - கோர்வை - கோவை. குரு(வு) கோர் - கோ. தீவு தீவம் = பெருந்தீவு.

-

-

வடமொழியாளர் தீவு என்னுஞ் சொல்லைத் த்வீப என்று திரித்து, இருபக்கம் நீராற் சூழப்பட்டதெனப் பொருட்கரணியங் காட்டுவர். இதன் பொருந்தாமையைக் கண்டுகொள்க.

நிலவணிகத்தார் பாதுகாப்பும் உதவியும் நோக்கி, எப்போதுங் கூட்டமாகவே சென்று வந்தனர். அக் கூட்டத்திற்குச் சாத்து என்று

பெயர்.

சார்தல் = சேர்தல், கலத்தல், கூடுதல்.

66

நல்லெழில் மார்பனைச் சார்ந்து

99

(கலித்.142)