பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




67

கோவேறு கழுதை, பிற்காலத்திற் கி.மு.ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே சின்ன ஆசியாவிற் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. அது ஆண்கழுதைக்கும் பெண்குதிரைக்கும் பிறந்த கலப்பினமாகும். வணிகச் சாத்திற்குக் கழுதையும் குதிரையுமே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன.

66

"தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப நெரியற்

புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்

தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்.” (பெரும்பாண்.77-80)

அரபிக் குதிரைகள் பெரியனவும் பேணுதற் கரியனவுமாதலால், பெரும்பாலும் படைகட்கும் அரசர் ஊர்தற்குமே பயன்படுத்தப்பட் டிருக்கும். நாட்டுத்தட்டு என்றும் அச்சிமட்டம் என்றும் சொல்லப் படும் சிறுதரக் குதிரைகளையே சாத்துகள் பயன்படுத்தி யிருக்கும். நாட்டுத்தட்டு இந்தியாவிலேயே வளர்க்கப்படுவது. அச்சிமட்டம் சுமதுராத் (Sumatra) தீவின் வடமேற்குப் பகுதியாகிய அச்சியிலிருந்து (Achin) வந்தது.

சாத்துகள் குதிரைகளைப் பயன்படுத்தியதை, பெருஞ்சாலை வழிகளில் ஆங்காங்குக் கட்டப்பட்டிருக்கும் சாத்தனார் (ஐயனார்) கோவிற்குமுன், சுதையாலும் சுடுமண்ணாலும் செய்து நிறுத்தப் பட்டுள்ள குதிரையுருவங்களினின்று அறிந்துகொள்ளலாம்.

குதிரை தமிழகத்திற்கு வந்த பின்னரே, குமரர் காதல் வாழ்வில் மடலேற்றம் என்னும் மணமுறை வினை தோன்றியிருத்தல் வேண்டும்.

ஓர் இளைஞன் தான் காதலித்த பெண்ணை அவள் பெற்றோர் தர இசையாவிடின், நீர்ச்சீலை மட்டும் அணிந்து உடம்பு முழுதும் சாம்பற்பூசி எருக்குமாலை யணிந்து, ஊர் நடுச்சந்தியிற் பனங்கருக்கு மட்டையாற் செய்த குதிரைமே லமர்ந்து, தான் காதலித்த பெண்ணின் உருவப்படத்தை வலக்கையிலேந்தி, அதை உற்று நோக்கியவண்ணமா யிருப்பான். ஊர்ப்பெருமக்கள் அதனைப் பார்த்தவுடனேயே, அவன் எல்லா வகையிலும் பெண்ணிற்குத் தகுதியுள்ளவ னென்றும் அவனிலுஞ் சிறந்தவன் இல்லையென்றுங் காணின், பெண்ணின் பெற்றோரிடம் பேசித் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கவுங் கூடும். அது அத்துணை எளிதாக முடிவதா யில்லாவிடின், அவர் அவனை நோக்கி, “நீ ஆய்வு தருகின்றையா?” என வினவுவர். அவன் “தருகின்றேன்” எனின், அவனை அம் மடற் குதிரைமீது அமர்ந்திருந்த வாறே பெருந்தெரு வழியாக ஊரைச் சுற்றி யிழுப்பர். பனங்கருக்காற் காயம் படுந்தொறுங் காதல் மறம் (வீரியம்) கிளரின், அவன் கடைப் பிடியையும் அவன் எண்ணம் நிறை