பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அடுத்தமெய்ந் நண்பர்அந்த ணாளர்

மடைத்தொழி லாளர் மருத்துவக் கலைஞர்

வருவது கூறும் வானூற் கணியர்

அரசர்க் கைவகை யுறுதிச் சுற்றம்.

69

ரு

பாண்டியன் தன் ஆள்நிலத்தை மூன்று மண்டலங்களாகவும், ஒவ்வொரு மண்டலத்தையும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாட்டையும் பல கூற்றங்களாகவும் பிரித்தாண்டதாகத் தெரிகின்றது. மண்டலம் என்னுஞ் சொல் மண்டிலம் என்றுந் திரியும்.

மண்டலம் என்பது வட்டம். அச் சொல் வட்டம், வட்டகை, வட்டாரம் என்னும் சொற்கள் போன்று நாட்டுப் பகுதியைக் குறித்தது. அது தூய தென்சொல்லே.

முண்டு உருட்டுக் கட்டை. முண்டு - முண்டம் உருண்டு திரண்ட கட்டி, சதைத்திரள், கை கால் தலையில்லா வுடல், பெரிய வுருட்டுக் கட்டை. முண்டு - முண்டை = முட்டை. முண்டு - முட்டு - முட்டை. முண்டு - மண்டு. மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டி. மண்டியிடுதல் = காலை மடக்குதல்.

-

மண்டு மண்டலம் லம் = 1. வட்டம் (பிங்.). 'சுடர் மண்ட மண்டலம்' (திருநூற்.80). 2.வட்ட வடிவம் (திவா.), 3. மந்திரச் சக்கரம். 4. கதிரவனை அல்லது திங்களைச் சுற்றியுள்ள ஊர்கோள் (வட்ட வொளிக்கோடு). 5.காதலன் காதலியின் உடம்பிற் பொறிக்கும் வட்ட வடிவமான உகிர்க்குறி. 6. கயிறு பாம்பு முதலியவற்றின் சுற்று. “மண்டலம் பயிலுரகர்” (பாரத. குருகுல.3). 7. வட்ட வடிவமான படை வகுப்பு(குறள். 767, உரை). 8. குதிரை வட்டமாகச் சுற்றி யோடுதல். “பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றி னானே" (சீவக.795). 9.நடுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் கூடி வளைந்திருக்க மற்ற விரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை (சிலப். 3:18, உரை). 10.வில் லோர் இருகாலையும் வளைத்து நிற்கும் நிலை.

மண்டலம் - மண்டலி.

மண்டலித்தல் = 1.வளைத்தல்.2.காலை வளைத்து நிற்றல். 3.சுற்றிச் சுற்றி வட்டமிடுதல். 4. ஒரு பாட்டின் இறுதி எழுத்து அசை சீர் சொல் என்பவற்றுள் ஒன்று அடுத்த பாட்டின் முதலில் அமையப் பாடுதல்.

மண்டலம் - மண்டிலம் = 1. வட்டம். 2. வட்டவடிவம். 3. கதிரவன். “பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு" (பெரும்பாண். 442). 4. திங்கள். “செய்வுறு மண்டிலம்” (கலித்.7). 5. வட்டக் கண்ணாடி மையறு மண்டிலம் போலக் காட்ட” (மணிமே.25:137). 6. வானம். (பிங்.).7. பார்

66

66