பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




77

விலை மதிப்பில் இரண்டரைப் பங்கு வெள்ளிக்குச் சமமென்று தீர்க்கப்பட்டுள்ளது. இதுவே முதற் பொன்னளவைத் திட்டமாக இருக்கலாம். கி.மு. 700ஆம் ஆண்டு, சிந்தாற்றிற்கும் நீலாற்றிற்கும் இடைப்பட்ட எல்லா நாடுகளிலும், பொன்னும் வெள்ளியும் பணமாக வழங்கின என்பது பெரும்பாலும் தேற்றம். உரோமர், தம் காலம்வரை, வெள்ளிப் பணிக்கலையிலும் அறிவியலிலும் வேறெந் நாட்டாரினும் மிகத் தேர்ச்சி பெற்றிருந் திருக்கலாம்.”-பிரித்தானியக் கலைக் களஞ்சியம் (1970). 20, ப. 536.

மேற்காட்டிய மேற்கோட் பகுதிகள், தமிழறியாதவராற் பெரும் பாலும் மேனாடுகளேபற்றி யெழுதப்பட்டவையாதலால், அவற்றுள் தமிழர் வரலாற்றிற்கு ஒவ்வாதன வெல்லாம் அறியாமையின் விளை வென்று கருதியமைக.

இற்றையுலகில் மிகப் பெரிய வெள்ளிச்சுரங்கம் மெக்சிக் கோவில் (Mexico) உள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகளிலும் (U.S.A.) கானடாவிலும் வள்ளி பெருவாரியாகக் கிடைக்கின்றது. தென்னமெரிக்காவிலும் வெள்ளி எடுக்கப்படுகின்றது. முதன்மை யான வெள்ளி யீய நாக மணல்கள் ஆத்திரேலியாவிற் கிடைக் கின்றன. சிற்றளவாக வெள்ளி கிடைக்குமிடங்கள் உலகெங்கும் பரவியுள்ளன.

பண்டைத் தமிழகத்தில், வெள்ளிக் கலங்கள் பயன்படுத்தப் பட்டது மட்டுமன்றி, வெள்ளி வேய்ந்த மாடங்களும் அம்பலங் களும் அரண்மனைகளிலும் கோவில்களிலும் அமைந்திருந்தன.

66

அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில் வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி

விளங்கில வந்தி வெள்ளி மாடத்

99

திளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி'

(புறம்.390)

99

(சிலப் 25:4-5)

(சிலப்.பதி. 41)

" வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்"

வெள்ளி சிற்றளவாகக் கிடைத்ததனால், அரசராலும் பெருஞ் செல்வராலும் அணிவகைப் பொருள்கட்கன்றி, பொது மக்களாற் பல்வகைக் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்படவில்லை. அதனால், வெள்ளிக்காலம் என ஒரு காலமும் ஏற்படவில்லை.