பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

புதுக் குலங்கள்

புளியங்காரர் (வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்திற் புளியம்பழக் குத்தகை யெடுப்பவர்), வளுவாதியர் (திருச்சிராப்பள்ளி புதுக் கோட்டை வட்டார வலையருள் ஒரு பிரிவினர்.)

மதமாற்றத்தால் தோன்றிய குலங்கள்

சமணர், பவுத்தர், கிறித்தவர், முகமதியர். மொழிமாற்றத்தால் தோன்றிய குலங்கள்

ஆங்கிலம்-சட்டைக்காரர்.

திரவிடம்- (1) சேரநாட்டுத் தமிழக் குலங்கள்.

(2) கருநட குடக துளுநாட்டுத் தமிழக் குலங்கள். (3) வடுக (தெலுங்க) நாட்டுத் தமிழக் குலங்கள். (4) நீலமலைத் தமிழக் குலங்கள்.

மூவகைத் திரவிடக் குலங்கள்

(1) பெயர் மாறாதவை : எ-டு: கம்மாளன், பாணன், அடுத்தோன் (குடிமகன்), வெளுத்தேடன் (வண்ணான்).

(2) பெயர் திரிந்தவை: எ-டு: ஈடிக, கொறச்ச, சோடர்.

(3) பெயர் மாறியவை: எ-டு: ஒக்கலிக, குருப்பு, மங்கல (வாடு). குலமுயர்த்தும் வழிகள்

ஊண் - புலால் மறுத்தல், பச்சரிசிச் சோறுண்ணல்.

உடை- பிராமணர்போற் கச்சங் கட்டுதல், பிராமணர் அணியும் ஆடையே அணிதல்.

அணி- ஆடவர் பூணூல் அணிதல், பெண்டிர் நூற்கயிற்றில் தாலி கோத்தல்.

-

குலப்பெயர் குலப்பெயரை மாற்றுதல் அல்லது பட்டப் பெயரைக் குலப்பெயராக ஆளுதல்.

ஆட்பெயர் – வர்மன் குப்தன் என்னும் ஈறுகள் கொண்ட வடசொற் பெயர் பூணல்.

பட்டம் - பிள்ளை, முதலியார், செட்டியார் என்னும் பட்டங் கொள்ளுதல்.

மணவுறவு - மேற்குலத்திற் பெண் கொள்ளல்.