பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

மொழி- இயன்றவரை வடசொற் கலந்து பேசுதல், சமற்கிருதங் கற்றல், சமற்கிருதநூ லெழுதுதல், அல்லது செய்யுளியற்றல்.

பழக்கவழக்கம் - ஆடவர் காலையிற் சந்தியாவந்தனஞ் செய்தல், கைம்பெண் மணமின்மை.

பூசாரி - இருவகைச் சடங்கிற்கும் பிராமணனையே பூசாரியாகக் கொள்ளுதல்.

ஆரியத்தொடர்புக் கதை-குலமுதல்வன் வேள்வியில் தோன்றின தாகவோ, ஆரியனுக்குப் பிறந்ததாகவோ, கதை கட்டிக்கொள்ளுதல். ஒழுக்கம்-பிராமணனுக்குத் தானம் அல்லது தொண்டு செய்தல், இயன்றவரை பிராமணர் சடங்கைப் பின்பற்றல்.

சவ முடிவு

எரிப்பு.

இவற்றுள், எரிப்புத் தவிர, ஆரியச் சார்பான வெல்லாம் அறி யாமையாலும் அடிமைத்தனத்தாலும் நேர்வனவே. மக்கள்தொகை மிக்க இக்காலத்தில், புதைப்பினும் எரிப்பே பொருளாட்சிச் சிக்கனத்திற் கேற்றதாகும்.

குலப்பட்டம் தோன்றிய வகைகள்

(1) முன்னோர் பதவி -(படை) முதலியார், படையாட்சி.

-

(2) முன்னோர் வேந்தனாற் பெற்ற சிறப்பு- ஏனாதி,காவிதி,வேள்- வேளான், அரசு, எட்டி - செட்டி, முதலி, பிள்ளை.

(3) முன்னோர் அருஞ்செயல் - புலிகடிமால், களம் வென்றான். (4) முன்னோர் கொடிவழி - அதிகமான், மலையமான் - மலை மான், வாணன் (வாணகோவரையன்), முத்தரையன் (முத்து ராசு).

(5) ஊர்த்தலைவன் அல்லது குடித்தலைவன் பட்டம் - நாடான், நாட்டான், நாட்டாண்மைக்காரன், ஊராளி, கரையாளன், அம்பலகாரன், மன்றாடி, குடும்பன், கவுண்டன், உடையான். (6) தொழில் - பண்ணையாடி, மந்திரி, ஓதுவார், குருக்கள். (7) தொழிற் கருவி - சாம்பான் (சாம்பு=பறை).

(8) அறிவு - புலவன், பண்டிதன், பண்டாரம்.

-

(9) சிற்றரசன் தொடர்பு வளுவாதி, தொண்டைமான்.

(10) பத்திநெறியாட்சி - ஆண்டி.

-

(11) வேந்தன் தொடர்பு தேவன்.

(12) குலவுயர்த்தம் - பிள்ளை, முதலி.