பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

டிருக்கின்றன. ஒருவர் வசிக்குந் தெருவில் மற்றொருவர் வசிப்ப தில்லை. சுபாசுபப் பிரயோசனங்களிலும் ஒருவரிருக்கும் வீF வழியாக மற்றொருவர் ஊர்வலம் வருவதில்லை. பிரேதங் கொண்டு போவ தில்லை. கருமாதியிலுமப்படியே. இருவருக்கும் பொது வாயுள்ள வீதியில் போவதற்குத் தடையிராது. சுவாமிகளுக்கு உற்சவாதிகளும் அந்தந்தக் கட்சிகளிலுள்ள வீதிகளிலேதான் நடத்துவார்கள்” என்று கனகசபைப் பிள்ளை 1901ஆம் ஆண்டில் எழுதியுள்ளர். (வருண சிந்தாமணி, பக். 502-3).

று

கல்வியிழப்பு: வேதம் முதலிய பன்னூலொடு பல்கலையும், பிராமணர்க்கு ஊணுடையுடன் வேத்தியற் செலவிற் கற்பிக்கப் பட்டன. தமிழர்க்கு மூவேந்தரும் ஒரு கல்விச்சாலையும் ஏற்படுத்த வில்லை.

நடுநிலை நயன்மை யிழப்பு: மூன்றாங் குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணக் குற்றவாளிக்குக் கொலைத்தண்டனை யிட்டதனால், அப் பிராமணன் ஆவி அவனை நெடுநாள் அலைக்கழித்ததென்று ஒரு கதை கட்டப்பட்டுள்ளது.மலையாள நாட்டிற் பிராமணனுக்குக் காலைத் தண்டனை யில்லையென்று சட்டமிருந்தது.

முன்னேற்றத் தடை: தமிழன் தன் முயற்சியினால் இம்மையில் தன் நிலைமையை யுயர்த்தினாலும், தன் குலத்தை மறுமையில்தான் மாற்ற முடியும் என்றும், சூத்திரன் பல பிறப்பில் தவஞ்செய்து வைசியனாகலா மென்றும். இங்ஙனமே வைசிய நிலையிலும் சத்திரிய நிலையிலும் முயன்ற பின்னரே இறுதியிற் பிராமணனாக முடியு மென்றும், ஒரு திரிவாக்கக் (Evolution) கொள்கை புகுத்தப்பட்டது. இதை நம்பி ஏராளமான பொருளை வேள்வியிற் செலவிட்ட பேதையர் எத்தனையோ பேர்! இனி, ஆறு தாண்டலையும் கடல் கடத்தலையும் தடுத்தது அறிவு வளர்ச்சித் தடையாகும்.

(2) பண்பாட்டுத் துறை

மறமிழப்பு:

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்.

99

(கலித்.103)

என்று புகழப்பட்ட ஆயர் குலம், இன்று பெண்டிர் மட்டுமன்றி ஆட வரும் ஆட்டுக்குட்டிகள் என்னுமாறு, அடங்கியொடுங்கி யமைந்தது. அன்று கூற்றுவனும் நடுங்குமாறு கோவர் (ஆயர்) நடத்தி வந்த கொல்லேறு கோடல்விழா இன்று மறவராற் சல்லிக்கட்டு என்னும் பெயரில் காட்சியளவாக நடைபெற்று வருகின்றது. பொது வர் கல்லூரி அல்லது கோவர் கல்லூரி என்று அழகிய பெயரிடவும் துணிவின்றி, யாதவர் கல்லூரி என்று ஒரு வடநாட்டரசன் பெயர் பற்றிய வடசொல்லை ஆண்டுள்ளனர்.