பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

நயன்மைக் கட்சி யமைச்சர், எறும்புக்கடி போன்ற பிரித்தானியத் தினும் பாம்புக்கடி போன்ற பிராமணியம் கொடிதென்றும், ஆங்கிலர் ஒருகாலும் இந்தியாவினின்று நீங்கா ரென்றும் கருதினதனால், ஆங்கிலராட்சிக்கு மாறாகப் பேசினவரையும் ஒழுகினவரையும் தடியடி யடித்தும் சிறையிலிட்டும் துன்புறுத்தினர். இது பொது மக்கட்கு நேரிற் சொல்லப்பட்டபோது அவர்க்குச் சினம் மூண்டது. அதனால் தேசியக் கட்சி விரைந்து வளர்ந்தது. இறுதியில், பிரா மணரல்லாத காந்தியடிகள் முனிவர் கோலம் பூண்டு, தாழ்த்தப் பட்டவரை யணைத்துப் பொதுமக்களொடு தொடர்பு கொண்ட பின், வெற்றி கிட்டிற்று; விடுதலையும் கிடைத்தது.விடுதலைப்பற்றும் நாட்டுமொழி யறிவும் பொதுமக்கள் தொடர்பும் இன்மையால், நயன்மைக் கட்சித் தலைவர் 1937ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிற் படுதோல்வி யடைந்தனர். பேராயம் ஆட்சியைக் கைப்பற்றியது. தனித்தமிழ் முன்னோடியர் இருவர்

நாட்டுப்பற்றிற்கு உயிர் மொழிப்பற்று. முன்னது எல்லார் வாயிலாகவும் வெளிப்படும்; பின்னது புலவர் வாயிலாக மட்டுமே வெளிப்படும்.

இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், சூரிய சூரிய நாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற் கலைஞன் என்று மாற்றி, மறுமலர்ச்சித் தனித்தமிழ்த் தொண்டைத் தொடங்கிவைத்தார்.

பாம்பன் குமர குருதாச அடிகள், சேந்தன் செந்தமிழ் என்னும் ஐம்பான் வெண்பாத் தனித்தமிழ் நூலியற்றி, நூற்றுக்கணக்கான வடசொற்கட்கு நேர்த் தென்சொற்களும் மொழிபெயர்த்தும், ஆக்கியும் வைத்தார்.

தனிப்பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள்

கல்விக் கடல்; தமிழ் ஆங்கிலம் சமற்கிருதம் ஆகிய மும்மொழி வல்லுநர்; மருத்துவம், கருநூல் (Embryology), தொலைவுணர்வு (Telepa- thy), மனவசியம் (Mesmerism), அறிதுயில் (Hypnotism) முதலிய பல்கலை யறிஞர்; நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வாசிரியர் ஆகிய பல்வகை யாசிரியர்; அடக்க மும் அஞ்சாமையும் உண்மை யொப்புக்கொள்வும் குலமத வேற்றுமை யின்மையும் கொள்கைக் கடைப்பிடிப்பும் கொண்ட பண்பாட் டாளர்; நாட்டிற்கும் மொழிக்குமன்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; மாபெருந் தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற் கெண்பது விழுக்காடு வடசொற் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடியும் வந்த காலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களால் நெருக்குண்டு அடியோடழிந்து போகவிருந்த நிலையில், 1916ஆம் ஆண்டிலிருந்து வடசொற்களை அறவே களைந்து, தூய தீந்தமிழில், உரைநடையும் செய்யுளுமாகிய இருவகை வடிவிலும், அறிவியல்,