பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

தொல்காப்பியர் காலத்தில் கழகமும் ஏற்படவில்லை. பாண்டியன் பெரும்பாலும் மணவூரில் வதிந்திருத்தல் வேண்டும். அற்றைப் பாண்டியன் பெயர் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று, பனம்பாரனார் குறித்துள்ளார். அவன் இரண்டாம் கடல்கோட்குத் தப்பி ன இடைக்கழகப் பாண்டியன் அல்லன். நிலமில்லாத தன் குடிகள் சிலர்க்கு நிலம் ஒதுக்கியதனால், அப் பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

CC

அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து

99

என்று சிறப்புப் பாயிரங் கூறுவதால், அரங்கேற்ற அவையில் தலைமை தாங்கினவன் நால்வேதமும் வல்ல ஒரு பிராமணத் தமிழ்ப்புலவன் என்பது தெளிவாகின்றது. இது இரா. இராகவையங்கார் தலைமையில் உ.வே. சாமிநாதையர் தம் நூலை அரங்கேற்றிய தொத்ததே.

தொல்காப்பியத்திலுள்ள ஆரியக் கருத்துகளும் ஒருசில வ சொற்களும்பற்றி நாம் வருந்த வேண்டுவதில்லை. அது அக்காலத்து நிலைமை. ஆரியக் கருத்தும் சொல்லும் கொண்டிருந்ததனாலேயே, அது இதுவரை அழிவுறாமல் தப்பிவந்துள்ள தென்று நாம் உணர்ந்து மகிழவேண்டும்.

கிறித்துவிற்கு முற்பட்ட கடைக்கழகக் காலத்து நூல்களுள், நமக்குக் கிடைத்துள்ளது திருக்குறள் ஒன்றே. அதுவும், ஆதிபகவன் கதையாலும் திரிவர்க்க வழிநூலென்னும் இளைப்பாலும் திருவள்ளுவ வெண்பாமாலையாலுமே தப்பி யிருத்தல் வேண்டும். திருக்குறட்கு ஐந்நூறாண்டு முற்பட்டதும், இயற்றமி ழிலக்கணம் முழுவதும் குமரிநாட்டு முறைப்படி எடுத்தியம்புவதுமான தொல்காப்பியம், நம் முன்னோரின் பெருமையை அறியவும், மீண்டும் தமிழை அரியணை யேற்றவும் நாமும் முன்னேறி நம் உரிமையை முற்றும் பெறவும், இன்று நம் கையில் உள்ளதெனின், இது நம் நற்காலத்திற் கேதுவான இறைவன் திருவருளே என்று தெரிந்து கொள்க. தொல்காப்பியத் தொழிற்குலங்களும் தொழில்களும்

அகவர் (வ. சூதர்.) -அரசன் பள்ளியெழுச்சி பாடுவோர்.

66

சூத ரேத்திய துயிலெடை நிலையும்

நாளீண்டிய நல்லகவர்"

அடியோர்

99

(தொல்.பொருள்.91)

(மதுரைக்.223)

தொல்காப்பியத்தில் வடசொல்லே ஆளப்பட்டுள்ளது. அடித்தொழில் செய்பவர், அடிமையர். துறவியர்.

அந்தணர்