52
கும்-கும்பு. கும்புதல்
குவிதல், கூடுதல்.
கும்பு-கும்பம் = 1.குவியல். 2. குடம். 3. யானை மத்தகம். 4.கும்ப வோரை. 5. கும்ப மாதம் (மாசி).
கும்பம்-வகும்ப (kumbha).
கும்பு-கும்பளம் பூசணிக்காய்.
கும்பு-கூம்பு-கூப்பு. கூப்புதல்
=
கும்பு-கும்பிடு. கும்பிடுதல்
=
குவித்தல். கைகுவித்தல்.
கும்பு-குப்பு-குப்பல். குப்பு-குப்பி-கொப்பி
=
கும்மி.
குப்பு-குப்பை = குவியல், மேடு, கழிவுப்பொருட் குவியல்.
-
-
கும் குமி - குமிழ் குமிழி. குமி -குவி - குவியல், குவியம், குவால், குவை.
கும் - குங்கு. குங்குதல் = 1.குவிதல்.2.சுருங்குதல்.3.குன்றுதல். குங்கு - கொங்கு = குவிந்த பொருள் அல்லது இடம்.
கொங்கு - கொங்கை = 1. குவிந்த முலை. 2.மரத்தின் புடைப்பு (protuberances or knobs of a tree).
கொங்கு - கோங்கு = கொங்கைபோற் குவிந்த மொட்டு, அதன் மலர், அது பூக்கும் மரம்.
99
(புறம்.336:9-10)
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவனப் பேந்திய முற்றா விளமுலை என்பது,கோங்கமொட்டு கொங்கைபோற் குவிந்ததென்பதைத் தெரி வித்தல் காண்க.
கொங்குநாடு பிற்காலத்திற் குடகொங்கு குணகொங்கு என இரண்டாகப் பிரிந்தது. பின்னர்க் குணகொங்கும் வடகொங்கு தென்கொங்கு என இரண்டாகப் பிரிந்தது. எருமையூர் நாட்டின் மேற்பகுதி குடகொங்கு; "குடகக் கொங்கரும்"(30:159) என்று சிலப்பதிகாரம் கூறுவதால், குடகப் பகுதியே முதற்காலக்கு கொங்காகும். அதன் கீழ்ப்பகுதியும் சேலங் கோவை மாவட்டங்களும் குணகொங்கு, அது இரண்டாகப் பிரிந்தபின், எருமையூர் நாட்டின் கீழ்ப்பகுதி வடகொங்கு; சேலங் கோவை வ மாவட்டங்கள் தென்கொங்கு. வடகொங்கின் தென்பகுதி கங்கநாடென மாறிற்று.
ன்று கொங்குநா டெனப்படுவது சேலங் கோவை மாவட்ட நிலப்பகுதியே. அதுவே தென்கொங்கு வடகொங்கு மேல்கொங்கு (மீகொங்கு) என மூன்றாகப் பிரிந்தும் உள்ளது.
கொங்குநாடு தொடர்ந்த போர் நிகழ்ச்சியாற் செங்களமாகி அமைதி குலைந்ததனால், சேரன் தன் தலைநகரைக் கருவூரினின்று