பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மொழியாம். அக் கலப்பினால், இந்திய ஆரிய மொழி எகர ஒகரக் குறில்களையும் இழந்தது.

ஆரியப் பூசாரிகளான பிராமணர் தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்டபின். வேதமொழியுடன் ஏராளமான திரவிடச் சொற்களும் தமிழ்ச்சொற்களும் அவற்றினின்று திரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புதுச்சொற்களும் இடுகுறிச் சொற்களும் கலந்து, கலவை மொழியில் இதிகாச புராணங்களும் தரும சாத்திரங்களும் நாடகங்களும் பிறவும் இயற்றப்பட்ட பின்னரே, கி.மு. 6ஆம் நூற்றாண்டுபோல் சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழி நிறைவாக உருவாயிற்று. பிராகிருதம் (பிராக்ருத) என்பது முந்திச் செய்யப்பட்டது என்றும், சமற்கிருதம் (ஸம்ஸ்க்ருத) என்பது கலந்து செய்யப்பட்டது என்றும் பொருள் படுவன வாகும்.

இந்தைரோப்பியம், வேதியம், சமற்கிருதம் என்னும் மூவேறு நிலைகளில், ஆரியம் தமிழ்ச்சொற்களைக் கடன் கொண்டுள்ளது வேதியம் கடன்கொண்டது வடநாட்டுப் பிராகிருத வாயிலாக வென்றறிக. வடமொழி என்னும் பெயர் வேதமொழிக்கும் சமற்கிருதத்திற்கும் பொதுவாகும். பைசாசி, சூரசேனி, மாகதி என்று பைசாசி,சூரசேனி, வடநாட்டில் மூன்றும், திராவிடி என்று தென்னாட்டில் ஒன்றுமாக, பிராகிருதம் நான்கென வகுத்தனர்.

வேதமொழி போன்றே சமற்கிருதமும் நூன்மொழியாகும். அது பிறந்ததுமில்லை; இறந்ததுமில்லை. ஒரு மொழிக்கு உயிர் உலக வழக்கே. சில பல பண்டிதர் பல்லாண்டு வருந்திக் கற்றுச் சமற்கிருதத் திற் பேசுவதனால், அது உயிர்மொழியாகிவிடாது. அது உயிர்மெய்யு மன்று; சவமுமன்று; வல்லோன் புனைந்த பாவை போன்றதே.

உலக வழக்கு மொழிகளா யிருந்து இறந்து போனவற்றை மட்டுமன்றி, சென்ற நூற்றாண்டு மேலை மொழியறிஞர் புனைந்த எசுப்பெராந்தோ (Esperanto), நோவியல் (Novial) முதலிய செயற்கை மொழிகளைக்கூடக் கற்றுப் பேசக்கூடியவர் உலகிலுள்ளனர்.

மறையியலாக மட்டுமுள்ள வேதமொழிக்கு இலக்கணம் வகுத்தது ஐந்திரம் என்றும், மறையியலும் (வைதீகமும்) உலகியலும் (லௌகீகமும்) கலந்த சமற்கிருத மொழிக்கு இலக்கணம் வகுத்தது பாணினீயம் என்றும் அறிதல் வேண்டும்.

பாணினீயம்

சமற்கிருதத்தின் தலைசிறந்த இலக்கண நூலாகிய பாணினீயம் பாணினியால் கி.மு.4ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இலக்கணநூலை வியாகரணம் என்பர் வடநூலார். அது கூறுபடுப்பு