பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

வேம்பாய்ப் (Bombay) பைதிரம் (பிரதேசம்) முழுதும் முன்

காலத்தில் வேணாடா யிருந்தது. முன்னர் நைசாம் அரையத்தைச் சேர்ந்திருந்த எல்லோரா (Ellora), பழைய பட்டையங்களில் (சாஸனங்களில்) வேளூர் என்றும் வேளூரகம் என்றும் குறிக்கப் பட்டுள்ளது. வேம்பாய்ப் பைதிரத்துச் சோழாபுரம் (Sholapur) மாவட்டத்தில் ஒரு நகர் வேளாபுரம்(Velapur) என்ற பெயர் கொண்டுள்ளது. அகமதுநகர் வட்டத்தில் வேளாபுரம் என்றும், பூனா மாவட்டத்தில் வேளகம் என்றும், பல நகரங்கள் உள்ளன. அப் பைதிரத்தைச் சேர்ந்த வேளகம் (வேள் கிராமம் (?)) என்னும் மாவட்டத் தலைநகர் பெல்காம் (Belgaum) என்றும், வேள்பட்டி என்னும் ஊர் பேல்ஹூட்டி (Belhutti) என்றும் வழங்குகின்றன. ஒய்சள மன்னரின் பட்டப்பெயரான பெல்லாள என்பது வேளாளன் என்பதன் திரிபாகவே கருதப்படுகின்றது.

தொடக்கக் காலத்தில், வேணாடு மராட்டிய நாட்டில் மட்டுமன்றி கூர்ச்சரத்திலும் பரவியிருந்தது. கத்தியவார் கச்சுப் (Cutch)பைதிரங்களில், இன்றும் பலவூர்கள் வேளா என்பதன் திரிபான பேலா(Bela) என்னும் பெயர் கொண்டுள்ளன. அகத்தியர் துவராபதிப் போந்து பதினெண்குடி வேளிருள்ளிட்டாரைக் கொண்டுவந்தார் என்னும் நச்சினார்க்கினியர் கூற்றும், வேதக் காலத்தில் மராடமும் குச்சரமும் பஞ்சதிரவிடத்துள் அடக்கப் பட்டதும் இங்குக் கவனிக்கத்தக்கன.

பிற்காலத்துத் தோன்றிய சளுக்கியர் வேணாட்டை ஆண்ட தனாலேயே, “வேள்புல வரசர் சளுக்கு வேந்தர்” என்று திவாகரமும் பிங்கலமும் கூறுகின்றன.

கங்கர்

இற்றை எருமையூர் (மைசூர்) நாட்டின் ஒரு பகுதியை, அஃதாவது, பண்டைக் குணகொங்கின் வடபாகத்தில் ஒரு பகுதியை, கங்கர் என்னும் மரபினர் கடைக்கழகக் காலத்திலேயே ஆண்டு வந்தனர்.

66

துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி

என்று அகப்பாட்டும்,

66

பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்"

என்று சிலப்பதிகாரமும் கூறுதல் காண்க.

99

(அகம். 44)

(சிலப்.25:157)

கொங்கன் என்னும் பெயரே கங்கன் என்று திரிந்திருக்கலாம்.

6