பக்கம்:பாவியக் கொத்து.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பாவியக் கொத்து

கணவன் மடலேப் படித்துக் காட்டினள். 70 இனுமொரு மாதம் இருந்து வருவதாய் வந்த செய்திக்கு இருவரும் வருந்தினர். வருத்தம் வளர்ந்ததும் இரக்கமாய் மலர்ந்தே, உறுத்தும் வளமையால் அன்பெனக் காய்த்துக் கயல்விழி பிரிவுக்குக் களங்கமாய்க் கனிந்தது! மயலுறும் நெஞ்சம் அறிவை மறைக்கவே, எண்ண வாய்க்கால் இருவர் நினைவையும் ஒன்ரும் இணைத்தது நினைவுநீர் வலுத்தது! இருப்பினும் அச்சம் இருவர்க்கும் இருந்ததால் விருப்பக் குறிப்பொடு விலகிச் சென்றனர். 岔纹 சூழலால் பெய்த எண்ணத் தூறலில் காலூன் றிற்று கயமைக் காளான்! மறுநாள் மாலை இருவரும் பிணைவதாய் ஒருநூறு சொற்களில் உளறிக் கொட்டினர்!

நடக்க விருந்த நச்சு நிகழ்ச்சியைக் கடக்கக் கயல்விழி அஞ்சி அஞ்சியே இரவு முழுவதும் உறங்காது இருந்தாள்! உறவின் நினைவுகள் ஒழுங்கினர்க் கெங்கன் நறவு பிலிற்றி நலஞ்செய் யும்மோ அங்ங்னே ஒழுங்கிலார்க் கந்த நினைவுகள் § {} நஞ்சு பிலிற்றி நலங்கொலல் இயற்கை!