பக்கம்:பாவியக் கொத்து.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

அற்றைக் குடியும் அடியோடு வீழ்ந்ததுவோ? ஒற்றைத் தமிழனும் இல்லா தொழிந்தானே? 100

மாய்க்கின்ற செந்தமிழை மாளாமல் காத்தற்கே வாய்க்கின்ற ஆளன் ஒருவன் வருவாளுே? வெட்டுண்டு சாயும் விறல்சேர் தமிழ்க்குடியை முட்டுண்டு தாங்க ஒருவன் முளைப்பானே? இந்தி வெறியர் தமிழை இடர்ப்படுத்தும் மந்திந் தனத்தை மறிக்கொருவன் வாரானே? ஆர்க்குந் தமிழ்நா டரசமைத்தே, இந்தியினைத் தீர்க்கின்ற வல்லான் திருவுருவம் காணுேமோ? பொய்யாத் தமிழ்மரபின் தாழ்வைப் புதுப்பிப்பான்

  • , 출

எய்யாமல் எய்தும் புகழ்:

109