பாவிபக்கொத்து
வேல்மார்பன்:
உரிமை மணக்கும் வாழ்வே உயர்ந்தது :
அ. சா. வழக்குரைஞர்:
உலகமும் அதனுள் உள்ள பொருள்களும் உலக மக்கள் யாவர்க்கும் உரிய, அப்படி இருக்கையில் அறியார் சிலரொ(டு) எப்படி என்நிலம் இதுவெனக் கேட்கலாம் ? | 73
வேல்மார்பன்:
- 18
உரிமை என்பது நீங்கள் உரைக்கும். உலகமும் அன்று; பொருள்களும் அல்ல. ! அவையெலாம் உடைமை அவைஒரு வற்கென் றெவரும் விளம்பார் 1 இனுஞ்சில நாட்களில் 'நாடும் நிலமும், நகரும், ஊரும் வீடும், வித்தும், அவைதரு விளைவும் எல்லாப் பொருள்களும் எல்லாப் பயன்களும் எல்லார்க்கு மாகும்" எனும்பொது உடைமை வந்த்ே தீரும் வகையினை அறிவேன்! முந்திடும் அந்நாள் விரைவினில் முகிழ்க்க F&G என்னல் முடிந்த தொண்டினை ஏற்பேன் :
இந்நாள் உரைக்கும் உரிமையில் தில்லை.
புறத்தே ஆகும் பொருள்களே உடைமை !
அறத்த தாகி, அகத்துள உணர்வையும்,
அவ்வுணர் வாலே அலரும் கருத்தையும், இவ்வுல கோர்க்கிங் கியம்பிடும் உரிமை ஒன்றே நானிங் குரைக்க வருவது: இன்றிவ் வுரிமைக் கிழுக்கு வந்தது.