பக்கம்:பாவியக் கொத்து.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குரை காதை

அ. சா. வழக்குரைஞர்:

என்ன இழுக்கு வந்ததிங் இயம்பு ?

வேல்மார்பன்:

செந்தமிழ் வழங்கும் சிறுவர் வாய்களில் இந்தியைப் புகுத்தி விழுங்கெனல் இழுக்கே. 34}{}

வழக்குரைஞர்:

புதுமொழி ஒன்றைப் படிப்பது தவரு?

வேல்மார்பன்:

புதுமொழித் தேவை என்னஇப் பொழுது ?

வழக்குரைஞர்:

பிறன்வந் தாண்ட பெரும்பா ரதத்தை' அறவழி நின்றே மீண்டும் அடைந்தோம்! பற்றிக் கிடந்த பகையினைப் போக்கி ஒற்றுமை நிலவிட ஒருமொழி வேண்டும் !

வேல்மார்பன்:

ஒற்றுமை இலாமலா ஒன்றென நின்று கற்றுத் தேர்ந்த கவின்பெறு மாங்கில ஆட்சியைத் தொலைத்தோம்; அவர்களால் வந்த கேடுகள் என்ன? நன்மையைக் கிளத்தின் 210 ஏடுகள் போதா இருப்பினும் உரிமை' - ஒன்றில்ை அன்ருே ஒருங்கிணைந் தெதிர்த்தோம்;

இன்றைக்கு மட்டும் என்ன வந்தது?

| | 9