இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வழக்குரை காதை
அ. சா. வழக்குரைஞர்:
என்ன இழுக்கு வந்ததிங் இயம்பு ?
வேல்மார்பன்:
செந்தமிழ் வழங்கும் சிறுவர் வாய்களில் இந்தியைப் புகுத்தி விழுங்கெனல் இழுக்கே. 34}{}
வழக்குரைஞர்:
புதுமொழி ஒன்றைப் படிப்பது தவரு?
வேல்மார்பன்:
புதுமொழித் தேவை என்னஇப் பொழுது ?
வழக்குரைஞர்:
பிறன்வந் தாண்ட பெரும்பா ரதத்தை' அறவழி நின்றே மீண்டும் அடைந்தோம்! பற்றிக் கிடந்த பகையினைப் போக்கி ஒற்றுமை நிலவிட ஒருமொழி வேண்டும் !
வேல்மார்பன்:
ஒற்றுமை இலாமலா ஒன்றென நின்று கற்றுத் தேர்ந்த கவின்பெறு மாங்கில ஆட்சியைத் தொலைத்தோம்; அவர்களால் வந்த கேடுகள் என்ன? நன்மையைக் கிளத்தின் 210 ஏடுகள் போதா இருப்பினும் உரிமை' - ஒன்றில்ை அன்ருே ஒருங்கிணைந் தெதிர்த்தோம்;
இன்றைக்கு மட்டும் என்ன வந்தது?
| | 9