பக்கம்:பாவியக் கொத்து.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

வடக்கில் சீனன் வாலே ஆட்டிஞ்ன். இடக்குச் செய்தனன் இடர்பாக் கித்தான்; கிடக்கு தென்றே சும்மா கிடந்த்மா? அடக்குதற் கனைவரும் அலைந்தெழ வில்லையா? ஆளுல் நீங்களோ, ஒற்றுமை ஒற்றுமை என்றே இந்தியைக் கற்றுக் கொடுப்பீர் கட்டாய மாக; கற்றுக் கொடுக்க முன்வந் தீரே, 220 கற்றுக் கொள்ள நாங்கள்முன் வந்தமா?

வழக்குரைஞர்:

மொழிவெறி கொண்டு முன்னே றுதற்கு வழியறி யாமல் இருந்திடும் நீங்கள் அறியா வகையால் அதனைக் கற்கிலீர்! வறியராய் மூடராய் வாழவே விரும்பினரீர்!

வேல்மார்பன்:

I

20

இந்தி படித்தால் ஏழெட் டாயிரம் வந்து குவிந்து வறுமையைப் ப்ோக்குமா? இந்தியைக் கற்ருல் இதுவரை நுழையா மந்தை அறிவு மண்டையில் ஏறுமா? செந்தமிழ் படித்தால் சீர்குலை வோமர்; 230

பைந்தமிழ் கற்பதால் பாழ்ாய்ப் ப்ோவமா? இந்தி படித்தால் நிலாக்கோள் ஏறி உந்தி வான்வழி உலாவருவோமா?. இந்தியைப் படிக்கப் பசிஎடுக் கர்தா? இந்தியை ஏற்ருல் உழாமல் விளையுமா?