பக்கம்:பாவியக் கொத்து.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குரை காதை

வேல்மார்பன்:

அருள், அறம், மறஞ்சேர் அருந்தமி ழகமே! இருளில் வீழ்ந்தனை: என்றெழு வாயோ? புகழ்செய் புலவோர் புரந்தசெந் தமிழே 280 இகழ்படச் சாம்பினை என்றலர் வாயோ!

பழிபடா வாழ்க்கைப் பைந்தமிழ் மகனே இழிபடக் கிடந்தனை என்றெழு வாயோ ?

(மக்கள் தீர்ப்பைக் கேட்டுக் கொதித்தெழுகின்றனர். வேல்மார்பனைக் காவலர்கள் இருவர் இழுத்துச் செல் கின்றனர். காவலர் தம் கைத்தடிகள் ஆரவாரிக்கும் மக்களின் மண்டைகளைப் பிளக்கின்றன. புகைக் குண்டுகள் வீசப்பெறுகின்றன. மக்கள் சிதர்ந்தோடு கின்றனர். இ ந் தி ய உயரற மன்றத்தின்மேல் கழுகுகள் வட்டமிடுகின்றன.)

ےہرجمص۔