பக்கம்:பாவியக் கொத்து.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-உல் -

சந்த அமைப்பைச் சரிபார்ப்பதுதானே யாப்பு ! 'அடிக்கோல் இல்லையானல் ஓரடி நீளம் என்று எப்படிக் சொல்லமுடியும்? கையோ, முழமோ ஒரடி நீளம் ஆகுமா? ஒரு கை நீளம், ஒரு முழ நீளம் என்று வேண்டுமானல் சொல்லலாமே தவிர, ஓரடி நீளம் என்று எப்படிச் சொல்வது? எனவே, அடியளவு இல்லாதது அடியென்று சொல்ல இயலாததுபோல், பா அளவு இல்லாதது பாட்டு ஆகுமா ?

பா அளவுதானே யாப்பு ! ஏனே தெரியவில்லை, இ ந் த வகையில் தெரிந்தவர்க ளெல்லாம் முரணிப் பேசுகிருர்கள்.

இனி, எதிர்காலத்தில், இவர்களெல்லாரும் சேர் ந் து எழுவாயும் பயணி இல யு ம் இல்லாமலேகூட தொடர்களை(!) எழுதலாம்.

தாள் ஆடையை உடுக்க முற்படுபவர்களுக்கு, நூலிழை ஆடை எப்படிப் பிடிக்கும் ?

எப்படியோ? தமிழ் தப்பிப் பி ைழ த் து வருகிறது? இல்லெனில் தமிழையேகூட வேண்டாம் என்று இவர்கள் கூற முற்பட்டு விடுவார்கள் !

என் செய்வது? அழிந்து வரும் தமிழினத்தைத் தமிழே யல்லாமல் வேறு யார் தடுத்து நிறுத்திவிட முடியும்?

இனி, தமிழே அழியத் தொடங்கில்ை, தமிழைக் காப்பது எதுவாக இருக்க முடியும் ?

தமிழைத் தமிழேதான் காக்கும் ! எனவே, தமிழில் எழுதப்பெறும் செப்பமான இலக்கி யங்கள்தாம் தமிழைக் காக்க முடியும் !

ஆங்கில இலக்கியங்கள் இருக்கும் வரை - - சேக்சுபியர், மி ல் டன், டென்னிசன், ஓர்ட்சுஒர்த் - ஆகியோர் இருக்கும் வரை-ஆங்கிலம் அழியாது.

அதேபோல், திருக்குறளும், தொல்காப்பியமும், க ழ க இலக்கியங்களும் இருக்கும் வரை தமிழ் அழியாது.