பக்கம்:பாவியக் கொத்து.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

சுற்றிய காட்சிச் சூழலை மறந்து வற்றிய நிலத்தில் வருபுனல் போலப் பெருகிய உணர்விற் பின்னிய நினைவால் உருகிய நெஞ்சோ டுட்கார்ந் திருந்தேன்.

இராவிருந் தயின்றவர் ஏகினர்; என்தாய் வரா விருந் தோடி வரவேற் பதுவும், வெற்றிலைத் தட்டுடன் விரைவது மாக முற்றத் திருந்தார்; முதிய தந்தையும் பெரியவர் சிலரொடு பேசி யிருந்தார்; உரியவென் தங்கை உவகை விழியோ(டு) 器鲁 என்பால் நெருங்கி இனிமேல் உங்கள் அன்பும், என்பும் அண்ணிக் குரியன; இலையா? அண்ணு?’ என்றனள்; அந்த விலையிலா அன்பை வியந்து, அவள் கையைப்

பற்றி, இழுத்துப் பனிமுகங் கிள்ளி நெற்றி நீவி, என்நெஞ்சில் ஒன்றிய அருமைத் தங்கையே! அண்ணியும் உன்றன் பெருமை கேட்பின் பெரிதுவப் பா’ளெனச் சொல்லி விடுத்தேன். சுவைவிருந் துண்டு நல்ல நண்பர் நால்வர் நெருங்கினர்! 份翰

இருந்துபோ’ என்பாய், இனியோ உண்ட விருந்து முடிந்தது வீடுபோ’ என் பாய்! இன்றை இராவோ இல்லறத் தரசிமன்றவிற் பின்னிய மலர்க்கொடி வந்தே ஒவியத் துருவை உள்ளத் திருத்தி ஆவியைப் பறிக்கும் அணியிரா! இதுவரைக் கண்டுகண்டு உவந்த கனவு நிகழ்ச்சியை

12