அத்திப்பூ
18
(வேறு)
உளமிருந்தது; உணர்விருந்தது; அழுதாள்!-அதில்
ஊறுகின்ற நினைவிருந்தது; அழுதாள்! வளமிருந்தது; வனப்பிருந்தது; அழுதாள்'. அதில்
வாழ்க்கை என்ற கனவிருந்தது; அழுதாள்! குளமிருந்தது; நீரிருந்தது; அழுதாள்-அதிற்
குளித்து மூழ்க வழியிருந்தது; அழுதாள்! மளமளவென நீர்வழிந்தது; அழுதாள்!-என்
மடியிருந்தது தரையில் புரண்டே அழுதாள்!
இடமிருந்தது; இரவிருந்தது; அழுதாள்!-நெஞ்சில்
இளமை என்னும் தேனிருந்தது; அழுதாள்! தடமிருந்தது; காவிருந்தது; அழுதாள்!-நாங்கள்
தனிமை என்னும் நினைவிருந்தது; அழுதாள்! உடலிருந்தது; அழகிருந்தது; அழுதாள்!-நாங்கள் ஒன்றிப்போன நிலையிருந்தது; அழுதாள்! குடலிருந்தது! வயிறிருந்தது; அழுதாள்!-நாங்கள்
கூடிமகிழப் பசியிருந்தது அழுதாள்!
காற்றிருந்தது: கணப்பிருந்தது; அழுதாள்-நான்
கணவ னென்ற உறவிருந்தது; அழுதாள்! ஊற்றிருந்தது: மாற்றிருந்தது; அழுதாள்!-என் உள்ளத்தவளின் உறவிருந்தது: அழுதாள்! நேற்றிருந்த நிலையிறந்தது; அழுதாள்!-இனி
நீங்கிடாத பிணைப்பிருந்தது; அழுதாள்! ஏற்றிருந்த பொறுப்பிருந்தது; அழுதாள்i-நான்
இருந்தும் எண்ணி விசித்து விசித்து அழுதாள்!
190
300
21 G