பக்கம்:பாவியக் கொத்து.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

警8

தீண்டுதல் வேண்டா! தீதிலா உளத்தீர் வேண்டுவேன் ஒன்று! விரிந்தயில் வுலகில், 'மக்களே போல்வர் கயவர்' எனுமொழி ஒக்கப் பொருளெலாம் உற்றது கண்டேன்!

விரும்பிக் குலேந்தவள் அல்லள். விளக்கிடாப் பெரும்பே ரிடர்வரப் பிழைசெய் தேனே! 37 ፴ என்னைக் குலைத்தவன் எவனென அறியேன்! அன்னைக் குரைத்திலேன்: ஆருமிஃ தறியார்: ஆன்றவிந் தடங்கிய அருளோய் கேட்க! மூன்ருண் டிற்கு முன்னே நடந்தது: ஒருபுன் மாலை, ஊர்முனை யிருந்த அருமை நண்பி ஒருத்தியோ டளவி இருளில் மீண்டேன்; எவரும் காணு ஒருமுனை திரும்பி ஓடு நடையுடன் வந்துகொண் டிருந்தேன்; வந்தவள் என்பின் வந்துகொண்டிருந்தான், வன்மனத் தொருவன் 380 அவன் வர(வு) அறியேன்; ஆள் உரு மறைக்கும் குவியிருள் முடக்கில் கொடுங்கை இரண்டு வாயினைப் பொத்தின; வால்விழி கட்டின.

ஆய கொடுநிலை அயர்ந்தேன்; விழிக்கையில் அத்தான், என்னென் றறைகுவேன்; அறிவிலி கொத்தும் பசிக்கென் உயிரைக் குடித்ததை; ஒருநொடிப் பொழுதில் உளத்தைச் சிதைத்ததை; பெருநிறை யழித்துப் பெருமை தீய்த்ததை;

வாழ்வெனும் நற்பெரும் வழியினை அடைத்ததை:

பாழ்ங்கிணற் றென்னைப் பாழ்மகன் வீழ்த்ததை: என்னென் றியம்புவேன்? இயம்பி இருசெவி