பக்கம்:பாவியக் கொத்து.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

காளாம்பி

ஓவியப் பாவையை ஒருநாள் கண்டதும் ஆவியைத் தந்தவள் ஆவியைப் பெற்றதும், பொன்னங் குரும்பைப் பொலிகுலே தொங்குந் தென்னந் தோப்பில் தெரிவையைத் தொட்டதும், ஆற்றுப் படுகையில் ஆழத் தோண்டிய 56 ஊற்றுப் புனலே யவட்கூட் டியதும், நெய்விட் டளவிய நொய்க்கொழும் பொங்கல் கைதொட் டளவி கன்னிவாய் தந்ததும்,

பல்லே முத்தாய்ப், பவளமாய் இதழைச் சொல்லி மகிழ்ந்ததும், சுருள்குழல் அலைத்ததும், காத்திருந் தாளின் கண்களைப் பொத்தியப் பூத்த முகத்தைப் பார்த்து மகிழ்ந்ததும், சிறுகை பற்றிச் சிவக்கக் கிள்ளி ஒருநா ளாகிலும் உனைமற வேனென் றுரைத்த காட்சியும், ஒண்டொடி முகமலர் மறைத்த அழகையும், மகிழ்ந்த வகையையும், 每鑫 அடிக்கிளை மாங்காய் அவள் தரக் கேட்க நொடிப்பொழு துச்சிக் கனிநூ றுகுத்ததும் நன்மணல் நாக நறுங்கனி பொறுக்கிப் பின்னெழ இருவரின் பெருந்தலே இடித்ததும், முத்துப் பல்வரி முறுவல் காட்டி

"அத்தான்!” என்றவள் ஆயிரஞ் சொன்னதும் விண்ணில் துரங்கிய வெண்ணிலா வொளியில் மண்ணில் ஆற்று மருங்கினில் அயர்ந்ததும், மேட்டுப் பாலையில் உண்ணிர் விடாய்க்கவன் ஆட்டுப் பாலே அங்கையிற் கறந்து ፳0 செவ்விதழ் பருகத் தந்ததும், சேயிழை