பக்கம்:பாவியக் கொத்து.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணவியக்கொத்து

பொன்றளிர் மேனி பொலிவிழுந் திருக்கக் கண்டுளம் வெதும்பிக் கண்ணெனும் மனைவிபால் கொண்ட துயர்தனைக் கூறுக வென்ருன்! பச்சைக் குழந்தைபோல் பாவை அழுதே அச்சிலா வண்டிபோல் ஆனதை-தானெரு நச்சு மனத்தளுல் நலிக்கப் பெற்றதைக் கூறினுள்; ஆளன் குமையும் உளத்தொடும் ஏறிடும் சாத்துயர் இடும்பொடும் கேட்டான்! 羁剑 உடற்கொதிப் படங்கி உளக்கொதிப் படங்கிக் கொடியுடல் தன்னை வாரி நிறுத்தித் தீயில் விழுந்து புழுப்போல் துடித்த அவ் வாயிழை தன்னைத் தேற்றினன்; அதன்பின் களங்கமில் ஒருத்தியின் கற்பைக் குடித்த அவ் விலங்கைப் பிடித்துச் சிதைத்திட வேண்டி, அவ்வூர் காக்கும் ஆணையோர் பாலே வெவ்விய நிகழ்ச்சியை விளக்கிட நடந்தனர்!

மன்றம் இருந்தது மக்கள் இருந்தனர்! முன்றில் நெடுங்கொடி துலாக்கோல் எழுதிப் 覆娜伊 பறந்துகொண் டிருந்தது பயன்பெறு மக்கள் அறங்கூ றவைய வாயிலில் நின்றனர்; சிதைக்கப் பட்ட் உடலொடும், செத்துப் புதைக்கப் பட்ட நெஞ்சொடும், தன்னல் அருந்துயர் உற்ற கணவன் தன்னெடும் பொருந்துயர் மன்றம் புகுந்தனள்: ஆங்கே, மங்கையின் கற்பை மாய்த்த வெங்கொடுங் கயவனே வீற்றிருந் தானே.