பக்கம்:பாவியக் கொத்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இபண்ணன்ல்லள்

-முன்னுரை.

(குடும்ப நிலையில் பெண்கள் பலவகை. கண வனின் வருவாயை எண்ணுமல் தம் உள்ளப் புனைவுகளையே பெரிதாகக் கருதுவார் பலர். அத் தகையாரில் சிலர் எவர் கூற்றுக்கும் செவி சாய்ப்பதில்லை; சிலரை அறிவு கூறித் தெருட்டியும் விடலாம்.

உண்மைகளை எடுத்து விளக்குங்கால், பொது வாகப் பெண்னே ஆணினும் அவற்றை எளிதா கப் புரிந்து கொள்ளுகின்ருள். அவ்வுண்மையான போக்கிற்குத் தானே அவனினும் பன்மடங்கு முன் நிற்கின்ருள். ஓர் ஆணைவிட, கொள்கை யைப் புரிந்துகொண்ட பெண்ணே அதனை இறுதிவரையில் கடைப் பிடிக்கின்ருள். தனக்குப் பிடிபட்ட ஒன்றிலிருந்து அவள் எளி தல் பின்னடைவதில்லை. அங்கிலையில் அவள் தன் முன்னுள்ள யாவரினும் மேம்பட்டு விளங்கு கின்ருள்; பிறர்க்கு முன்னேடியாகவும் நிற்கின் 'ருள். அத்தகைய பெண் திருத்தப் படுவதற்கு முன் னும் அதற்குப் பின்னும் கொண்டுள்ள மன வுணர்வுகள் இங்குக் கூறப்பட்டுள்ளன.)